சினிமாவில் புதிய நடிகர்கள் என எத்தனையோ பேர் வந்தாலும் கமலஹாசன், விஜய், அஜித், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஜீவா, ஆர்யா, சூர்யா ,கார்த்திக், விஷால், தனுஷ் என பல கதாநாயகர்கள் இங்கு வலம் வந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அவர்தான் ரஜினிகாந்த்.

இவரது திரைப்படங்களுக்கு தியேட்டரில் மட்டுமல்லாமல் வீட்டிலும் மவுசு அதிகம். இப்பொழுதும் தொலைக்காட்சிகளில் ரஜினியின் முத்து, படையப்பா, அருணாச்சலம், அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்டா படங்களை ஒளிபரப்பு செய்தாலும் அதனையும் பார்க்கும் கூட்டம் இன்று அதிகம் உள்ளது. குறிப்பாக இவரின் 'படையப்பா' திரைப்படத்தையும் அருணாச்சலம் திரைப்படத்தையும் இணையதளங்களில் தேடி தேடி ஏமாந்து போன கூட்டங்களும் இங்கு அதிகம். ஏனெனில் இந்த திரைப்படங்கள் ஓடிடியிலும் கிடைக்காமல் தொலைக்காட்சிகளிலும் போடப்படாமல் இருப்பதால் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எல்லோரும் போல அவரும் சாதாரணமான நடிகன் தான். ஆனால் ஏன் அவர் மீது மக்கள் இவ்வளவு அன்பை காட்டுகின்றனர் என பார்த்தால் அவரது ஸ்டைலும், அவரது பேச்சுமே இதற்கு காரணம் என்கின்றனர்.
இதையும் படிங்க: அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

அப்பொழுது படையப்பா திரைப்படத்தில், " உனக்கு வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவில்லை" என்று சொல்வதைப் போல இன்றும் தனது அழகையும் ஸ்டைலையும் மாற்றாமல் கனகச்சிதமாக நடித்து வரும் ஒரே ஹீரோ என்றால் அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சொல்லும் டயலாக்குகளான 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான், நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேனா என் பேச்சை நானே கேட்க மாட்டேன், நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் ஒண்ணா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை' என பல டயலாக்குகளுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

இப்படிப்பட்ட ரஜினிகாந்த் பல படங்களில் நடித்து தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வேளையில் திடீரென ஒரு நாள் அரசியலில் களமிறங்க போவதாக கூறினார். இதனால் மிகவும் விரக்தி அடைந்த அவரது ரசிகர்கள் அவரை சிறு நாட்களாக வெறுக்க ஆரம்பித்தனர். ஏன்? என புரியாமல் இருந்த ரஜினியிடம் உங்களை நாங்கள் நடிகனாகவே பார்த்து பழகியதால் அரசியல் என்பது உங்களுக்கு செட்டாகவில்லை அது உங்களுக்கு வேண்டாம் நீங்கள் எங்களை மகிழ்விப்பதே எங்களுக்கு போதும் என ரசிகர்கள் தரப்பிலிருந்து கூற, எனக்கு எனது ரசிகர்களின் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று அரசியலில் இருந்து மீண்டும் சினிமாவுக்கு வந்து இறங்கிய அற்புதமான நடிகர். அதன் பின்பு ஒரு முறை கூட அவர் அரசியல் பக்கம் திரும்பாமல் இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரை சொன்னால் சம்பளமே இல்லாமல் அவருடன் நடிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் அவரை வைத்து தற்பொழுது இயக்கி இருக்கும் திரைப்படம் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கூலி' திரைப்படம். கிட்டத்தட்ட பலதரப்பட்ட முயற்சிகளுக்கு பின்பு இத்திரைப்படம் முடிவடைந்து தற்போது எடிட்டிங் பணிகளில் முன்புறமாக இருக்கின்றது. இப்படிப்பட்டதான சூழ்நிலையில் பல படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இந்த படத்தில் தான் வில்லனாக நடிப்பதாகவும் இப்படத்தில் தான் நடிக்க வைப்பதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் பேசிய ஒரு வார்த்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

அதன்படி லோகேஷ் கனகராஜை குறித்து பேசிய நாகர்ஜுனா, " 'கூலி' திரைப்படத்தின் கதையை சொல்வதற்காக என்னை அணுகி வந்தார் லோகேஷ் கனகராஜ்... ஆனால் அவர் வந்த பொழுது நான் யோசித்த ஒரே விஷயம் என்னவென்றால், இவர் எதற்கு என்னை வைத்து படத்தை இயக்க விருப்பப்படுகிறார் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது லோகேஷ் கனகராஜ் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வில்லனாக நடிக்க உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா? என்று எனக்கு சொல்லுங்கள் அதற்கு பின்பு நீங்கள் சரி என கூறினால் கதைகளை பற்றி பேசலாம் என்று கூறினார். ஆனால் அவருடைய கான்ஃபிடன்ஸ் எனக்கு பிடித்துப் போனதால் நான் அவருக்கு எந்த விதமான மறுப்பையும் நான் தெரிவிக்கவில்லை.

மற்றொரு காரணம் அப்படி என்ன இந்த ஸ்கிரிப்ட்டில் இருக்கிறது என்பதை யோசிக்க ஆரம்பித்தேன். பின்பு அவர் இந்த திரைப்படத்திற்கு உண்டான ஸ்கிரிப்ட் என்னிடம் சொல்ல சொல்ல எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதன் பின்பு தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன் இப்பொழுது அந்தப் படத்தில் நடித்து முடித்து இருக்கிறேன் இந்த வேலையில் யாராவது என்னிடத்தில் வந்து கூலி திரைப்படத்தில் உங்களது கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் உடனே நான் சொல்லும் ஒரே வார்த்தை சூப்பர் என்று தான் சொல்லுவேன்" என்றார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள்.... எல்லாம் சரிதான் தலைவரே, ஆனால் சீக்கிரமாக இந்த படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லரை வெளியிட்டீர்களானால் எங்களுக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும் என தங்களது கருத்துக்களை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்
இதையும் படிங்க: படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!