எவ்வளவு கஷ்டம், எவ்வளவு விமர்சனம், எவ்வளவு வலிகள் என ஒரு ஹார்ட் டிஸ்கை தொலைத்து விட்டு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட்ட பாடு சொல்லி முடியாதவை. நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகர் ரஜினிகாந்தை வைத்து உருவாக்கிய 'கோச்சடையான்' திரைப்படம் மக்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதேபோல் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான தனுஷின் ' 3 ', 'வை ராஜா வை' திரைப்படமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவையே.

இப்படி இருக்க, ஐஸ்வர்யா தனது அப்பாவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து மீண்டும் இயக்கிய திரைப்படம் தான் "லால் சலாம்". மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. ஆனால் ரசிகர்கள் எந்த அளவிற்கு ஆர்வமாக படத்தை பார்க்க சென்றனரோ அதைவிட சோகமாக வெளியே வந்தனர். ஏனெனில் இத்திரைப்படம் சரிவர இயக்கப்படவில்லை என்றும் கதை களம் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகவில்லை எனவும் பல கலவையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆகவே இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படும் தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: எனக்கு அவர் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா..! மறைந்த நடிகர் ராஜேஷை பற்றி மனம் திறந்த ரஜினிகாந்த்..!

சரி திரையரங்குகளில் ஏன் இந்த படம் சரியாக ஓடவில்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் பலர் கேள்விகளை கேட்டனர். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, இப்படத்தின் கரு கதைக்களம் உள்ள ஹார்ட் டிஸ்க் தொலைந்து போய்விட்டதால் தான் படத்தை சரியாக உங்களுக்கு கொடுக்க முடியவில்லை. அந்த ஹார்ட் டிஸ்க் மட்டும் கிடைத்திருந்தால் படம் வேறு லெவலில் ஹிட் ஆகி இருக்கும் என மிகவும் வருத்தத்துடன் கூறி இருந்தார். ஆனால் இதனை பார்த்த பல நெட்டிசன்கள், அவர் படம் தோல்வியடைந்ததால் பொய் சொல்வதாகவும், படத்தை அவரால் சரியாக இயக்க முடியவில்லை எனவும், படம் தோல்வி அடைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் இப்படி சொல்லுகிறார் எனவும் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இப்படி இருக்க, தான் சொன்னது பொய்யல்ல உண்மை என்பதை நிரூபிக்க பல நாட்களாக போராடி வந்தார் ஐஸ்வர்யா. சரி திரையரங்குகளில் தான் இத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆனால் ஓடிடியிலாவது திரைப்படத்தை பார்த்து குறை நிறைகளை கண்டுபிடிக்கலாம் என நினைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் படத்தை ஓடிடியில் வெளியிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருந்தார் ஐஸ்வர்யா. இப்பொழுது அவருடைய சபதம் நிறைவேறி விட்டது எனவும் ஒருவேளை ஹார்ட் டிஸ்க் கிடைத்திருக்கலாம் எனவும் பலர் சொல்லும் அளவிற்கு தற்பொழுது தரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையில் ஹீரோக்கள் என பார்த்தால் விக்ராந்த் விஷ்ணு விஷால் ஆகியோர்தான். ஆனால் இதில் கெஸ்ட் ரோலில் வந்த நடிகர் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே அவரது மகளுக்காகத்தான். இந்த நிலையில் வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பக்ரீத் பண்டிகைக்கு ஸ்பெஷலாக பிரபல ஓடிடி தளமான 'சன் நெக்ஸ்ட்' தளத்தில் ரஜினியின் 'லால் சலாம்' திரைப்படத்தை வெளியிட உள்ளார் ஐஸ்வர்யா. இப்படத்தை ரஜினி ரசிகர்கள் கண்டு மகிழலாம் என்ற இனிப்பான செய்தியை, சன் நெக்ஸ்ட் குழுமம் அவர்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனைப் பார்த்த பல ரசிகர்கள் மகிழ்ச்சியோடு இருக்க, ஒரு வேலை ஹார்ட் டிஸ்க் கிடைத்திருப்பதால் அந்த காட்சிகளை இப்படத்தில் சேர்த்து இருப்பார்கள் என பரவலாக பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2வில் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்..! லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் நெல்சன் திலீப் குமார்..!