இன்று கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகைகளில் முக்கியமான நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்பொழுது வெளியாகியுள்ள நடிகர் தனுஷின் குபேரா திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா.

இப்படிப்பட்ட ராஷ்மிகா கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கௌடவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பார்க்க க்யூட்டாகவும், அழகாவும், புன்னையுடனும் ஜெனிலியாவை போன்ற வெகுளித்தனமான நடவடிக்கைகளையும் பார்த்து கவரப்பட்ட பல இயக்குநர்கள் இப்படத்திற்கு பின்பு ராஷ்மிகாவுக்கு பல படவாய்ப்புகளை கொடுத்தனர்.
இதையும் படிங்க: "அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை".. விமான விபத்து குறித்து கண்கலங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..!

இதனால் கிரிக் பார்ட்டி திரைப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானவர். இதனை அடுத்து கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலித்தார், பின் இவர்களது நிச்சியதார்தம் 2017 ஜூலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமணம் நடக்க இருக்கும் வேளையில் 2018ம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

பின்பு அவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான குபேரா படத்திற்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான "சாவா" படம் பல கோடிகளை கடந்து வெற்றி படமாக மாறி இருந்தது. குறிப்பாக மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயி பாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் காதலர் தினம் அன்று வெளியானது. முழுக்க முழுக்க ஹிந்தியில் உருவாகிய இந்த படம் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகாவும் நடித்து இருந்தனர். இப்பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் ராஷ்மிகாவை புகழ்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்க, இதுவரை, தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)", இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, "மைசா" எனப் பெயரிடப்பட்ட நடிகை ராஷ்மிகாவின் ஹாரர் பட போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். தற்பொழுது, இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை".. விமான விபத்து குறித்து கண்கலங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..!