சில சமயங்களில் சினிமாக்களில் திறமைகளை விட அதிர்ஷ்டங்கள் என்பது ஒருமுறைதான் நடக்கும். அது ஒருவரது வாழ்வில் கிடைக்கும் பொழுது அந்த அதிர்ஷ்டத்தை பிடித்துக் கொண்டார்கள் என்றால் அவர்களது வாழ்க்கை புகழின் உச்சத்திற்கே சென்று விடும் என்றே கூறலாம் அதற்கு உதாரணமாக இன்று விளங்குபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கோலிவுட் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா.. தற்பொழுது 1000 கோடி 2000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் நடிகை என்ற பெயரை பெற்று இருக்கிறார். இன்றும் இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளங்கள் புடை சூழ காத்திருப்பதால் இவருக்கு சினிமாவில் மார்க்கெட் என்பது குறையாமலே இருக்கிறது. இப்படி இருக்க சமீப காலத்தில் கன்னட மக்களின் பல வெறுப்புகளை வாரிக் குவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா அவை அனைத்திலும் இருந்து முற்றிலுமாக நீங்கி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த 'புஷ்பா 2' திரைப்படம் உலக அளவில் பல கோடிகளை ஈட்டியதால் இன்று ராஷ்மிகா கோலிவுட், பாலிவுட் மட்டுமல்லாமல் உலக அளவில் ஸ்டாராக விளங்கி வருகிறார்.
இதையும் படிங்க: சல்மான் கான் ஆக்ஷனை பார்க்க ரெடியா..? இன்று நள்ளிரவில் ஓடிடியில் மாஸ் என்ட்ரி..!

இப்படி தனது உழைப்பை முதலாக வைத்து சினிமாவில் இறங்கி மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 20-ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

இப்படி இருக்க, இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முல்லா மற்றும் பட குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.ராஜமௌலி கலந்து கொண்டார். பலரது எதிர்பார்ப்புகளையும் தூண்டி இருந்த 'குபேரா' திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ட்ரைலரை வெளியிட்டார் இயக்குனர் ராஜமவுலி. அதனைத் தொடர்ந்து இணையத்தில் அனைத்து மொழிகளிலும் இந்த படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியானது. திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியான அடுத்த கணமே தனுஷுக்கு பலரது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகார்ஜுனா, நடிகர் தனுஷ் ஆகியோர் பேசிய பின்பு நடிகை ராஷ்மிகா மந்தனா பேசினார். அப்பொழுது " அகமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்கு பிறகு பயணம் செய்ய வேண்டும் என்பதை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அந்த செய்தி எனக்கு மிகப்பெரிய நடுக்கத்தை கொடுத்திருக்கிறது. உண்மையில் இந்த உலகில் எதுவுமே நமக்கு நிரந்தரம் இல்லை என்பதை இந்த விபத்து நமக்கு காட்டுகிறது. இன்னும் நாம் எத்தனை நாட்கள் வாழ போகிறோம்... நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது... எதுவரை வாழ்க்கை செல்லும் என உண்மையாகவே யாருக்கும் தெரியாது.

ஆதலால் இன்று உங்கள் அனைவருக்கும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளுகிறேன் கவனமாக இருங்கள், இருக்கும் பொழுதே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களிடத்தில் கருணையோடு இருங்கள் வெறுப்புணர்வுகளை காட்டாதீர்கள் ஏனெனில் அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கையாக இருக்கிறது" என்று கூறி சென்றார்.
இதையும் படிங்க: அழகில் சூடேற்றும் ராஷ்மிகா மந்தன்னா.. உச்சகட்ட கிளாமர் கிளிக்ஸால் கிரங்கும் ரசிகர்கள்..!