தமிழ் திரையுலகில் தற்பொழுது அதிகப்பேரால் கொண்டாடப்பட்டு வரும் படம் தான் நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி". இத்திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆனதை அடுத்து படங்களை பார்த்து வீட்டிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில், படம் மாசாகவும் உள்ளது அனைவருக்கும் பிடித்த படமாக வெற்றியும் பெற்று உள்ளது. இப்படி இருக்க, சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லரில் 'ஒத்த ரூபாய் தாரேன்' பாட்டை போட்டதுக்கு ஒத்த ரூபாய் வேண்டாம் ரூ.5 கோடி போதும் என இளையராஜா, இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இதற்கான சரியான விளக்கத்தை ஐந்து நாட்களுக்குள் தரவேண்டும் அல்லது படத்திலிருந்து பாட்டை நீக்க வேண்டும் இவை இரண்டையும் செய்யவில்லை என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் சினிமா வட்டாரங்களில் பலரது வசைப்பேச்சுக்கு ஆளாகி இருந்தார் இளையராஜா.
இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஆதரவாக களமிறங்கி பேசிய கங்கை அமரன், 'குட் பேட் அக்லி' படத்திற்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாடலுக்கு எந்த கைத்தட்டல்களும் விழாமல் எங்கள் பாடலுக்கு மட்டுமே கைதட்டல் விழுகிறது. ஆக, எங்கள் பாடலை போட்டு நீங்கள் நடனம் ஆடினால் என்ன அர்த்தம். அப்பொழுது ஒரு உண்மையை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ரூ.7 கோடி சம்பளம் வாங்கி படத்திற்கு இசையமைத்தவரின் பாடல்கள் ஹிட் ஆகவில்லை. எங்கள் பாடலை போட்ட உடனே படம் ஹிட் ஆகிறது படத்திற்கு கைத்தட்டல் வருகிறது.
இதையும் படிங்க: கச்சேரி பணம் ராணுவத்துக்குத்தான் ஆனா கச்சேரி மட்டும் இப்ப இல்லப்பா.. இளையராஜாவின் பிளான்..!

இப்படி எங்கள் பாட்டினால் படம் ஹிட் ஆகும்பொழுது எங்களுக்கும் ஏன் சம்பளத்தில் பங்கு கொடுக்க கூடாது. அதை கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? ஹிட் கொடுக்கும் அளவிற்கு இசையமைத்த எங்களிடம் பாட்டிற்கான அனுமதி வாங்க வேண்டும் இல்லையா? உண்மையிலேயே நீங்கள் மதித்து அனுமதி கேட்டிருந்தால் அண்ணன் இளையராஜா இலவசமாக பாடலை கொடுத்திருப்பார். கேட்காமல் பயன்படுத்தியதால்தான் அண்ணனுக்கு கோபம் வருகிறது. உண்மையில் வழக்கு தொடர்வது பணத்தாசையால் இல்லை. அது எங்களிடமே அதிகம் கொட்டிக்கிடக்கிறது. விதி என்று ஒன்று உள்ளது. ஹிட்டானது அஜித் படம் இல்லை, அதில் வந்த எங்கள் பாட்டு தான். உங்கள் இசையமைப்பாளரால் செய்ய முடியாததை எங்கள் பாட்டு செய்து படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது. ஆக அதை முறைப்படி கேட்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக கொடுத்திருப்போம்' என்றார்.

இதனை பார்த்து கங்கை அமரனையும் பலர் வசைபாட, அப்பாவுக்கு எதிராக பிரேம்ஜியும் பேசின பின்பு தான் அந்த வசைபாடுதல் கைவிடப்பட்டது. அதன்படி பிரேம்ஜி பேசுகையில், " எனது அப்பா அவரது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதேபோல நான் எனது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றால் கண்டிப்பாக பேசுவேன் அல்லவா.அதற்காக தான் வந்திருக்கிறேன். இளையராஜாவால்தான் படம் ஓடியது என அவர் சொன்னதாக கேட்கிறீர்கள். அதெல்லாம் சும்மா. உண்மை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். குட் பேட் அக்லி படம் ஹிட் ஆனதற்கு முழுக்க முழுக்க அஜித் தான் முழு காரணம். அதுதான் நிஜம்'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பெண் இயக்குனர் மேக்னாவின் இயக்கத்தில் வெளியாகவுள்ள "லக்கிநன்" பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வல்லவன் பட தயாரிப்பாளரும், நடிகருமான தேனப்பன், கங்கை அமரனுக்கு எதிராகவும் ஜி.வி.பிரகாஷுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். அவர் பேசுகையில், கங்கை அமரன் ஜிவி பற்றி பொதுவெளியில் பேசி இருக்க கூடாது. குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தியது குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் மட்டும் தான் கேள்வி எழுப்ப வேண்டும்.
இளையராஜா இசையமைத்த 'பிதாமகன்' படத்தில் எம்.எஸ்.வி இசையமைத்த 'தகதகவென ஆட வா' பாடல், சிம்ரன் டேன்ஸ் ஆட பயன்படுத்தப்பட்டது. அதற்கு இளையராஜா பொறுப்பு ஏற்பாரா? இயக்குனர் பாலா தான் அந்த பாடல் வைத்தார். அப்பொழுது பாலாதானே பொறுப்பு.அதற்காக இளையராஜாவுக்கு பாடல் உருவாக்க தெரியவில்லை என சொல்ல முடியுமா? அப்படி என்ன கோபமோ தெரியவில்லை ஜி.வி.பிரகாஷ் மீது அவருக்கு? அவர் தனது சம்பளத்தை பல படங்களுக்கு விட்டுக்கொடுத்தார் தெரியுமா.

சமீபத்தில் கூட ஒரு படத்துக்கு தனது ரூ.60 லட்சம் சம்பளத்தை விட்டுக்கொடுத்தார். அதனாலேயே அந்த படம் வெளியானது. நீங்கள் செய்வீர்களா? என கோபத்தில் கொந்தளித்தார். இதனை பார்த்த பல நெட்டிசன்கள் தற்பொழுது ஜிவி பிரகாஷுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல் முறையாக இளையராஜாவை புகழும் ரசிகர்கள்..! ராணுவத்திற்கு என்ன கொடுத்திருக்கிறார் தெரியுமா..!