தமிழ் பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தனக்கு கணவனாக இப்படி ஒருவன் வரமாட்டானா என ஏங்கும் அளவிற்கு இருப்பவர் தான் நடிகர் ரவி மோகன். ஜெயம் படத்தில் நடித்ததால் மக்கள் மத்தியில் ஜெயம் ரவி என அன்புடன் அழைக்கப்பட்ட இவர், நிறைய படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் இவரது காமெடி திறமையால் அனைவரையும் தன் வசமாக்கினார். அடுத்து எம்.குமரன் s/o மகாலட்சுமி என்ற படத்தில் பாக்ஸராக வந்து மலையாளியாக வந்த அசினை, ஒய் மலபார் என சொல்லி மலையாள பெண்களை திரும்பி பார்க்க வைத்தார்.

இப்படி, ஜெயம், எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, மழை, தாஸ், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், இதய திருடன், தீபாவளி, வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், கோ, ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியெட், தனி ஒருவன், சகலகலா வல்லவன், பூலோகம், மிருதன், போகன், வனமகன், அடங்க மறு, டிக் டிக் டிக், தும்பா, கோமாளி, பூமி, பொன்னியின் செல்வன் (PS 1), இறைவன், அகிலன், பொன்னியின் செல்வன் 2, சைரன், பிரதர், தக் லைஃப், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கோபித்து கொண்ட ராஜேஷை வீடு தேடி வந்து சந்தித்தார் எம்.ஜி.ஆர்..! மனம் திறந்த நடிகர் கூல் சுரேஷ்..!

இப்படி பல படங்களில் நடித்த ரவிமோகனின் சினிமா வாழ்க்கை ஸ்ட்ராங்காக இருந்தாலும் நிஜ வாழ்க்கை ஆட்டம் கண்டு உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவரது வாழ்க்கையில் விவாகரத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. காரணம் தனது மனைவியான ஆர்த்தி தன்னை கொடுமை படுத்துவதாகவும் அவரது மாமியாரும் தன்னை வேதனை படுத்துவதாகவும் தன்னுடைய சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்த ரவி மோகன், இனி எனது வாழக்கையை எனக்கு பிடித்த மாதிரி அமைத்து கொள்ள போவதாக சொல்லி பாடகி கெனிஷாவை தற்காலிகமாக கரம் பிடித்துள்ளார்.

இது ஆர்த்தி ரவிக்கு மிகுந்த கோபத்தை வர வைக்க, தற்பொழுது விவாகரத்தை கொடுக்க மனமில்லாமல் தனது மகன்களுக்கு அப்பா வேண்டும் என சொல்லி நீதிமன்றத்தில் போராடி வருகிறார். மறுபுறம் பாடகி கெனிஷா, 'ஆர்த்தி ரவி, ரவி மோகனுக்கு கொடுத்த டார்ச்சரால் தான் அவர் தன்னை தேடி வந்ததாக' கூறி வருகிறார். இப்படியான வேளையில், நீதிமன்றத்தில் தனது கணவர் தன்னுடன் வந்து வாழ வேண்டும் அல்லது ஜீவனாம்சமாக எனக்கும் எனது மகன்களுக்கும் மாதம் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஆர்த்தி ரவியின் கோரிக்கைக்கு பதிலளிக்க ரவிமோகன் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படி ரவி மோகனுக்காக இருவர் சண்டையிட்டு கொண்டிருக்கும் இந்தவேளையில், ரவிமோகன் முதல் முறையாக படத்தை இயக்க இருக்கிறார் என்ற செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி, அவர் யோகி பாபுவை வைத்து காமெடி கலந்த பொழுது போக்கு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக நடிகர் யோகிபாபு தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: மறைந்த நடிகர் ராஜேஷ் குறித்த பயணங்களை பகிர்ந்து கொண்ட திரை பிரபலங்கள்..!