இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ஒரு அணியினுடைய வெற்றியை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் இதுவரை பல சவால்களைக் கடந்து பல அவமானங்களையும் கடந்து 17 தொடர்களை முடித்து 18 வது தொடரிலாவது கப் அடிக்க வேண்டும் என்ற முழு நோக்கத்தோடும் கடுமையான உழைப்புக்கு பலனாகவும் கிடைத்த ஒரு வெற்றியை தான் இன்று அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 18 வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி அனைவரையும் கலங்கடிக்க செய்தது என்று சொன்னால் மிகையாகாது. காரணம். 18-வது ஐபிஎல் தொடர் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. சுமார் 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து அனைவரையும் மகிழ செய்தது. ஆனாலும் அவர்களைத் தொடர்ந்து வந்த பஞ்சாப் அணி 191 ரன்கள் இலக்கை வைத்து களம் இறங்க, ஆர் சி பி அணிக்கு மிகவும் டப் கொடுத்தது. இதனால் இந்த வருடமும் கப்பு நமக்கு கிடைக்குமா..? கிடைக்காதா...? என பலரும் ஆதங்கத்தில் அமர்ந்திருக்க, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் அணி. சுமார் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை முதல் முறையாக தோற்கடித்தது ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு... கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!

இதனைப் பார்த்த பல பிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் ஆர்சிபியின் தீவிர ரசிகர்கள் வரை அனைவரும் கண்ணீர் விட்டு 17 வருட உழைப்புக்கு கிடைத்த பலனை மகிழ்ச்சியோடு இன்று அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வெற்றியானது கோலியின் கடுமையான உழைப்பிற்கும் பல நாள் அமைதிக்கும் கிடைத்த வெற்றி என அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களது பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன்படி முதல் முதலாக பதிவிட்ட முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் "அருமை, @RCBTweets! ஆச்சரியங்கள் நிறைந்த சீசனுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் முடிவு. @imVkohli, நீங்கள் பல வருடங்களாக இந்தக் கனவைச் சுமந்து வருகிறீர்கள், இன்றிரவு, இந்த கிரீடம் உங்களுக்கு உண்மையிலேயே பொருந்தும். #KingKohli. அடுத்த சீசனில் @ChennaiIPL இலிருந்து ஒரு வலுவான மறுபிரவேசத்தை எதிர்பார்க்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து இன்ஸ்ட்டாவில் தனது மகனான அயான், ஃபேன் பாயாக ஆர்சிபி வெற்றி அடைந்ததற்கு எமோஷனலாகி அழுத வீடியோவை எடுத்து பதிவிட்டு இருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

அவரை தொடர்ந்து இயக்குனர் பிரஷாத் நீல் RCB வெற்றியடைந்ததை துள்ளி குதித்து ஆனந்தமாக கொண்டாடினார்.

மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நியா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறாக பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கிளாமர் போட்டோவில் அசத்தும் மிருனாள் தாகூர்..! கண்களை மூடாமல் அழகை ரசிக்கும் இளசுகள்..!