இன்று தமிழகம் மட்டுமல்லாமல் ஜப்பான் வரை ஒலிக்கும் ஓர் படத்தின் பெயர் என்றால் அதுதான் "டூரிஸ்ட் ஃபேமிலி". இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம், இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது.
மேலும் இதற்கு காரணமான இயக்குனருக்கும், நடிகர் சசிகுமாருக்கும் இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். படம் வந்ததிலிருந்து பலரது பாராட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: படம் நல்லா இருந்தா மக்கள் பாக்க வராங்கய்யா.. வருங்கால இயக்குநர்களுக்கு நடிகர் சசிகுமார் கொடுத்த டிப்ஸ்..!

இந்த சூழலில், இப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் சசிகுமாருக்கு பல படவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்க சமீபத்தில் நேர்காணலில் பேசிய சசிகுமார், "இந்த படம் வெற்றி அடைந்ததால் இனி நான் நடிக்கும் படங்களில் சம்பளத்தை உயர்த்தி கேட்பேன் என சொல்லுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது நான் என் சம்பளத்தை உயர்த்த போவதில்லை. மேலும் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் பலரின் கனவை நினைவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கும் நிறைய நம்பிக்கை கொடுத்துள்ளது.

இனி யாரும் ஒரே மாதிரியான பேட்டனில் படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வித்தியாசமான படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை டூரிஸ்ட் ஃபேமிலி படம் கொடுத்துள்ளதாக நினைக்கிறேன். இன்னும் நிறைய ஃபேமிலி ஆடியன்ஸ் திரையரங்குக்கு வந்து படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பின் எனக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது" என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில் இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில், நடிகர் சசிகுமார், லிஜோமோல் ஜோஷ், சுதேவ் நாயர், கேஜிஎப் மாளவிகா, போஸ் வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில், 90 காலகட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் தான் 'ப்ரீடம்'. சசிகுமார் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' போன்று ராஜீவ்வை கொல்ல அனுப்பப்பட்ட மனித வெடிகுண்டு பெண்ணின் கதை என்பதை டீசரிலேயே ரிவில் செய்து இருந்தனர் படக்குழுவினர். இந்த சூழலில் அனைவரது எதிர்பார்ப்பையும் துண்டியுள்ள 'ப்ரீடம்' படம் வருகிற ஜூலை 10ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படமும் நடிகர் சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தருமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சண்டைய ஆரம்பிச்சுட்டீங்க... ஆனா மக்கள மறந்துட்டீங்க... நடிகை சிம்ரன் பேச்சு..!