இந்திய திரைதுறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சமந்தா என்றும் கியூட்டாக சிரித்தபடியே இருப்பார். இவரது சிரிப்பிற்கு அடிமையான ரசிகர்கள் பலர் உண்டு.

அப்படிப்பட்ட நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா". இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இதையும் படிங்க: என்ன ட்ரெஸ் இது..! சமந்தாவின் மாடல் உடையை கண்டு வியப்பில் நெட்டிசன்கள்..!

இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு கொண்டவர் எனவும் மக்கள் மத்தியில் அவரது பெயரும் பரவ ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் நன்றாக வாழ்ந்த இவர்கள் இருவர் மீதும் யார் கண் பட்டதோ தெரியவில்லை, நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர்.

இதனை அடுத்து, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து ரூ.200 கோடி பட்ஜெட்டில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ரூ.1600 கோடி செலவில் உருவாக இருக்கும் இரண்டு பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து படங்களை தயாரித்து வருகிறார். அனைத்து இடங்களுக்கும் சோலோவாக சென்று தனது வாழ்க்கையை நிம்மதியாக கழித்து வருகிறார்.

இப்படி இருக்க, தற்பொழுது தந்து சமூக வலைதள பக்கத்தில் தான் துபாய்க்கு சென்ற புகைப்படங்களையும் தனக்கு கிடைத்த வரவேற்புகளை குறித்தும் போட்டோ வாயிலாக பதிவு செய்துள்ளார் சமந்தா.
இதையும் படிங்க: முகத்தில் புது பொலிவு... சிம்பிள் சேலையில் அழகு சிலையாக மாறிய சமந்தா!