சிறு பட்ஜெட்டில் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஆகியோரின் நடிப்பில் அட்டகாசமாக வெளியாகி இருக்கக்கூடிய திரைப்படம் தான் 'மெட்ராஸ் மேட்னி'. மெட்ராஸ் மேட்னி என்று சொல்லும் பொழுதே நம் நினைவுக்கு வருவது மேட்னி ஷோ தான். இப்படி இருக்க திரைப்படம் எப்படி உள்ளது என்பதை கீழே பார்ப்போம்.

இத்திரைப்படத்தை குறித்து பார்க்கும் பொழுது, நடிகர் சத்யராஜ் ஒரு எழுத்தாளராக இருக்கிறார் அவர் எப்பொழுதுமே எழுதும் விதங்கள் சற்று மாறுபாடாகவே இருக்க, ஒரு பெண் அவரிடம் வந்து நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவதை விட மக்களைப் பற்றியும் சாதாரண மக்கள் படும் வேதனைகளை பற்றியும் எழுதுங்கள் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என அறிவுரை கூறி செள்கிறாள். மிகப்பெரிய எழுத்தாளரான சத்தியராஜ் அதற்காக எல்லாம் துளி கூட கவலைப்படாமல் அந்த பெண் சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஒரு மதுபாரில் காளி வெங்கட்டை சந்தித்து அவருடைய கதைகளை முழுவதுமாக கேட்கிறார்.
இதையும் படிங்க: அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்னிடம் அத்துமீறினார்..! பாடகி சின்மயி பேசிய வீடியோ வைரல்..!

அப்பொழுது ஆட்டோ ஓட்டுனரான காளி வெங்கட், தனது வருமானத்தை குறித்தும் தனது ஆட்டோ பயணங்களை குறித்தும் சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுவதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து தான் தன் மகன் மகளை படிக்க வைக்கிறேன் எனவும் அவர்களை எப்படியாவது பெரிய ஆளாக்கி என் கண்களில் பார்க்க வேண்டும் என போராடி வருகிறேன் என கூறினார். அதுமட்டுமல்லாமல் ஆட்டோக்காரரின் மகளான ரோஷினி நல்ல வேலையில் இருந்தாலும் திருமணத்திற்கு என்று பணங்கள் தேவைப்படுவதால் அதனை நினைத்து புலம்பி கொண்டு இருக்கிறார் காளி வெங்கட்.

மேலும் அவருடைய மகனை இன்ஜினியரிங் படிக்க வைக்கவும் போராடி வருகிறார். இப்படி அழகான குடும்பத்தை வைத்து நடத்தி வரும் அவர் எதற்காக குடிக்க வந்தார் அப்படி என்ன அவர்கள் வாழ்வில் நடந்தது என்பதை உணவு பூர்வமாக மக்களுக்கு எடுத்து காண்பித்துள்ளார் உள்ளார் இயக்குனர் என்றே சொல்லலாம். குறிப்பாக ஆட்டோ ஓட்டுனரான காளி வெங்கட்டின் கதை தான் இந்த 'மெட்ராஸ் மேட்னி'. இந்தப் படத்தின் கதையைக் கேட்கும் பொழுது ஒரு மாதிரியாக இருந்தாலும், ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தினுடைய வாழ்க்கையை அப்படியே நம் கண் முன் காண்பித்துள்ளார் இயக்குனர்.

குடும்பத்தில் ஆண் மகனாக இருக்கக்கூடிய அப்பாக்கள் அனைவரும் தன் பிள்ளைகளுக்காக எவ்வளவு உழைத்துப் போராடுகிறார்கள் என்பதும் எப்பொழுதுமே பிள்ளைகளின் மீது பாசத்தை மட்டுமே பொழியாமல் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பதும் பொறுப்பான அப்பாவாகவும் இருக்கும் சிறந்த படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. மேலும் காளி வெங்கட்டின் நடிப்பானது அல்டிமேட் ஆக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவரது மகளான ரோஷினி படித்த பெரியாளாகவே இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது அவர் படும் பாடுகளை குறித்தும் தனது மேனேஜரால் வரும் அனைத்து கஷ்டமான சூழ்நிலையையும் கடந்து அவர் எப்படி வருகிறார் என்பதை காண்பித்து பெண்களுக்கு ஏற்ற விழிப்புணர்வை ஒரு பகுதியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் என்றே சொல்லலாம்.

இந்தப் படத்தில் காட்சிகள் எந்த அளவுக்கு அருமையோ அதே போல் நடித்தவர்கள் அனைவரும் அட்டகாசமாக நடித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரோஷினியின் தாயார் மிகப்பெரிய படிப்புகளை படிக்காமல் இருந்தாலும் ஒரு பெண்ணாக உனக்கு பிடிக்காத வாழ்க்கையை நீ வாழாதே என்று தைரியமாக மோட்டிவேஷன் கொடுப்பதெல்லாம் படத்துக்கு அருமையாக இருந்தது. இப்படிப்பட்ட இந்த படத்தை மக்கள் கொண்டாடி வரும் வேளையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் சத்யராஜ் அவரது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பொங்க பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இப்படத்தை வெற்றி பெற வைத்த தமிழ் மக்களுக்கு மிக்க நன்றி. அழ வேண்டிய இடத்தில் அழுதார்கள் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்தார்கள், திருப்பூர் சுப்ரமணியம் சார், பட்டுபட்டுன்னு அவர் மேட்டரை போட்டு உடைத்து விடுவார். அவர் இந்த மெட்ராஸ் மேட்னி படம் ஹிட் என சொல்லி இருக்கிறாரு. அதுவே எனக்கு ரொம்ப சந்தோசம் தான். இந்த மாதிரியான படங்கள் ஓட ஆரம்பித்தால், கார்த்திகேயன் மாதிரி வித்தியாசமான கதைக்களம் வைத்துள்ள இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். இந்த படத்திற்கான வெற்றி வெறும் மெட்ராஸ் மேட்னிக்காக கிடைத்த வெற்றி மட்டும் அல்ல தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த வெற்றி இந்த வெற்றியை கொடுத்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்னிடம் அத்துமீறினார்..! பாடகி சின்மயி பேசிய வீடியோ வைரல்..!