தமிழ் திரையுலகில் தனது வசீகரிக்கும் குரலால் அனைவரையும் தனது உள்ளங்கையில் வைத்திருந்தவர் தான் பாடகி சின்மயி. இவரது குரல்களுக்கு அடிபணியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த வகையில் அழகான குரலை வைத்திருக்கும் பாடகி சின்மயி, பலரது விமர்சனங்களுக்கும் ஆளானவர். அப்படிப்பட்ட சின்மயி பல நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஆனால் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் படத்தில் பாடிய ஒரே பாடலில் மிகவும் ஃபேமஸான ஆளாக மாறி இருப்பது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு குரலும் ஒலித்து வருகிறது.

அப்படி என்ன தான் சின்மயிக்கு நடந்தது என பார்த்தால், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பாடல்களைப் பாடி தனக்கான அங்கிகாரத்தை பெற்ற சின்மயி பாடல் பாடுவதோடு மட்டுமல்லாமல் பின்னணியில் டப்பிங் குரல்களும் கொடுத்து பிரபலமாக வலம் வந்தவர். இப்படி பாடகியாகவும், பின்னை குரல் கலைஞராகவும் பிரபலமாக வலம் வந்த இவரது சினிமா வாழ்க்கையை மாற்றியது '#மெட்டோ' என்ற செயலி தான். காரணம் அந்த செயலி வந்த பின்பு ஏராளமான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலில் கொடுமைகளை பற்றி தெரிவித்து வந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலில் தொந்தரவுகளை குறித்து பாடகி சின்மயியும் அதில் பகிரங்கமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'முத்த மழை' பாடல் பாடி ரசிகர்களின் அன்பு மழையில் நனையும் பாடகி சின்மயி..! தடைகளை நீக்க வலுக்கும் ஆதரவு குரல்கள்..!

அவரது குற்றச்சாட்டுகளை பார்த்து பலர் அவருக்கு ஆதரவு குரல்களை கொடுத்து வந்தாலும், மறுபக்கம் வேண்டுமென்றே அவர் கவிஞர் வைரமுத்துவின் மீது பழி போடுகிறார் என்று தெரிவித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் அதற்குப் பின்பு அவருக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் திரை உலகில் குறைந்து கொண்டே வந்தது. மேலும் உச்சபச்சமாக நடிகர் ராதாரவி உத்தரவின் பெயரில் தொலைக்காட்சி மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் சின்மயி சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தை கூறி அதிலிருந்து அவரை வெளியேற்றினார். இதனால் அவருடைய பல வாய்ப்புகள் அவரை விட்டுக் கடந்து சென்றாலும் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை சரி வர பயன்படுத்தி வந்தார் பாடகி சின்மயி.

இந்த சூழலில், சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மேடையில் திடீரென தோன்றிய பாடகி சின்மயி, "முத்த மழை " என்ற பாடலை தனது வசீகரிக்கும் குரலால் பாட, அங்கிருந்த ரசிகர்கள் முதல் பல பிரபலங்கள் வரை அவருடைய பாடலுக்கு மயங்கி இருந்தனர். இந்த வேளையில் அவர் மீதான தடைகளை களைத்து அவரை மீண்டும் சினிமாவில் பாட வைக்க வேண்டும் என்ற ஆதரவு குரல் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. இந்த நிலையில், பாடகி சின்மயி சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வைரமுத்துவை குறித்து பேசியுள்ளார் சின்மயி, அதில், " மிகப்பெரிய கவிஞரான வைரமுத்துவை நான் சந்திக்க சென்றபோது திடீரென என்னை அவர் கட்டி அணைத்தார். அப்பொழுது என்னசெய்வதென்று தெரியாமல் நான் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டேன். ஆனால் அவர் செய்தது எனக்கு தவறாக உள்ளது என எனக்கு தோன்றுகிறது. ஆனால் அந்த சமயத்தில் எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. பின்பு சுதாரித்து கொண்ட நான் பதறியடித்து வெளியே ஓடி வந்து என் அம்மாவிடம் அழுதபடி சொன்னேன்.

ஆனால் அவரோ உன் கேரக்டர் எப்படின்னு சோதிக்க இப்படி பன்றாரோ என்னவோ, இவங்க எல்லாம் பெரிய ஆளுங்கமா, நாம்ப இத வெளியே சொன்னா கொலை கூட பண்ணிட்டு போய்டுவாங்க என என் அம்மா கூறினார்" ஆனால் என் அம்மா கீழே இருக்கிறார் என தெரிந்து தான் வைரமுத்து துணிச்சலாக இதை செய்தார்" என சின்மயி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்த காணொளியானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: படத்திற்காக நடிகை கயாடு லோஹர் செய்த காரியத்தை பாருங்க..! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!