சூடு பிடித்து வரும் போதை பொருள் வழக்குகளுக்கு தற்பொழுது நடிகர் நடிகைகள் தங்களது கருத்துக்களை வரிசையாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஏற்கனவே நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் அருண் விஜய் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில் அவர்களை தொடர்ந்து தற்பொழுது மேலும் ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதன்படி சமீபத்தில் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்பொழுது அவர் போதை பொருள் பயன்படுத்தி இருப்பது போலீசாருக்கு தெரிய வர, அவரிடம் அதிரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின் நீதிமன்ற காவலில் இருக்கும் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதிமுக பிரமுகரான பிரசாந்திடம் இருந்து கொக்கைன் என்ற போதை பொருளை வாங்கியதாகவும், அவர் தனக்கு கொடுக்க வேண்டிய ரூ 10 லட்சம் பணத்திற்காக ஒவ்வொரு முறையும் இந்த போதைப் பொருளை கொடுத்து தன்னை அடிமையாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதை வழக்கில் அடுத்த செக் அருண்விஜய்-க்கா..! உஷாராக அவர் செய்த வேலையை பாருங்க..!

இதனை அடுத்து நடிகர் கிருஷ்ணாவும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வர அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடைய வீடுகளிலும் அலுவலகத்திலும் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவருடைய தொலைபேசியை ஆய்வு செய்ததில் அதில் கோடு வேடு வைத்து பேசி இருப்பது அம்பலம் ஆகியிருக்கிறது. இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இதனைக் குறித்து முதலில் கருத்தை தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி " சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு என்பது ஏதோ இன்று நேற்று மட்டும் புழக்கத்தில் இல்லை, அது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. போதை பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடந்து வருவதால், அதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாடு போதைக்கு அடிமையாகி வருகிறது... அவ்வளவுதான்" என தெரிவித்து இருந்தார்.

அவரை தொடர்ந்து, ''3 பிஎச்கே'' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், " போதைப்பொருள் என்பது மிகவும் மோசமான ஒன்று அது மனிதனின் இயல்பை மாற்றிவிடும் ஆதலால் போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் " என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய நடிகர் அருண்விஜய், " நோ கமெண்ட்ஸ்.. நான் இங்கே என் பட நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறேன்.. இதை பற்றி பேசுவதற்கு அல்ல" என கூறி சென்றார்.

இப்படி அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வர, தற்பொழுது பாடகி சுசித்ராவும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அதன்படி, சுசித்ரா பேசுகையில், "ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் கொகைன் வகை போதைப் பொருளை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் சினிமாவை பொறுத்தவரை போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் யாருமே ரத்த பரிசோதனை செய்ய முன்வர மாட்டார்கள். ஏன்? சமீபத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை நடந்ததாக தெரியவில்லையே. உண்மையில் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக தான் போதைப்பொருள் கலாசாரம் என்பது தமிழ் சினிமாவுக்குள் வந்தது.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் பல இடங்களில் உள்ள பப்புகளிலும், ஓட்டல்களிலும் போதைப்பொருள் பயன்பாடு என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. மது விருந்துகளில் நடிகர் மற்றும் நடிகைகள் சர்வ சாதாரணமாக கலந்து கொள்வதை என்னால் பார்க்க முடிந்தது. இந்த சூழலில் கொகைன் பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கும் வந்தது. ஆனால் நான் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டேன்" என தெரிவித்தார்.

இதனை பார்த்த பல சினிமா பிரபலங்கள் பாடகி சுசித்ரா மீது கோபத்தில் உள்ளனர். மேலும் போலீசார் பாடகியிடம் விசாரணை மேற்கொண்டாலே பலர் சிக்குவார்கள் போல, ஏனெனில் அவருக்கும் கொகைன் கொடுக்க முற்பட்டார்களாம் என தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதையும் படிங்க: அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!