என்று ஏஐ தொழில்நுட்பம் சினிமாவில் அடியெடுத்து வைத்ததோ அன்றிலிருந்து ஃபேக்ரவுண்ட் செட்டுகள் அமைக்கும் வேலையை பாதி குறைத்து இருக்கிறது. அதேபோல் தான் இனி வரும் காலங்களில் நடிகர் நடிகைகள் தேவை இல்லை. உங்களிடத்தில் கதைகள் மட்டும் இருந்தால் போதும் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் அவர்களையும் கொண்டு வந்து விடலாம் என்ற சூழ்நிலை தற்பொழுது மாறி வருகிறது.

இந்த வேலையில் நடிகர் விஜயின் 'கில்லி' திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இருக்கும் வீட்டின் மாடி போன்ற காட்சிகளும் அந்த தெருக்களும் இருக்கும் அந்த ஏரியாவையே யாரும் இதுவரை கண்டிருக்க முடியாது. பல வருடங்களாக அந்தப் படம் சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் எடுக்கப்பட்டது என தான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் இப்படத்தின் இயக்குனர் கூறுகையில், அது முழுவதும் வீடே கிடையாது செட் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறியிருந்தார். இதனைப் பார்த்து அனைவரும் மிகவும் ஷாக் ஆயினர். காரணம் ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு பெரிய செட்டை அமைத்திருக்கிறார் என்பது இவ்வளவு நாளை தெரியாமல் போனதே என்பதுதான்.
இதையும் படிங்க: உச்சபட்ச கவர்ச்சி படத்தில் ரட்சிதா.. இனியும் இப்படி தானா..? நடிகை முடிவால் இளசுகள் ஹேப்பி...!

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வெளியான இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் 'பீஸ்ட்' திரைப்படத்தில் வரும் மிகப்பெரிய பிரமாண்டமான 'மால்' முழுவதுமே செட்டு தான் என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. ஆம்.. அது அனைத்தும் மால்களைப் போன்றே உருவாக்கப்பட்ட செட்டுகள் தான்.. ஏன்..டைட்டானிக் படத்தை எடுத்தாலும் அதுவும் செட்டு தான். இப்படி பல படங்களை நாம் எடுத்துப் பார்த்தால் அதில் வரும் பேக்ரவுண்ட் காட்சிகள் அனைத்துமே செட்கள் அமைக்கப்பட்டதாகவே இருக்கும். இந்த வரிசையில் பல சிறிய இயக்குனர்களே செட்டுகளை அமைத்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்யும் பொழுது பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி வரும் எஸ்.எஸ். ராஜமௌலி தனது திரைப்படத்தில் செட் அமைக்க மாட்டாரா என்ன?

அவரது திரைப்படத்தில் இன்று மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அதுதான் 'பாகுபலி'. இந்தத் திரைப்படத்தில் அவர் உபயோகித்தது அனைத்தும் செட்டுகள் தான். மேலும் பாதி காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் தான். நடிகை அனுஷ்கா 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் பருமனாகி வந்த பொழுது பாகுபலி இரண்டாம் பாகத்தில் கண்டினிவிட்டி மிஸ்ஸாக கூடாது என்பதற்காக கிராபிக்ஸில் அவரது உடலை இளமையாக காண்பித்து இருப்பார். ராஜமௌலியின் திரைப்படம் என்றால் அதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் அவரது படத்தில் அப்படி ஒரு தத்ரூபமான காட்சிகளை எடுத்து மக்கள் மனதில் பதியும் அளவிற்கு வைத்திருப்பார். பாகுபலிக்கு அடுத்ததாக அவர் எடுத்த "ட்ரிபிள் ஆர்" திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமான கதைகளை உருவாக்கி இருப்பார்.

அதிலும் குறிப்பாக ஜூனியர் என்டிஆர், ராம் சரணை பார்த்து "உயிரை விட மேலான உங்கள் நட்பு இருக்கும் வரை எனக்கு ஒன்றும் ஆகாது அண்ணா" எனக் கூறுவதெல்லாம் கூஸ்பம்பாக இருந்தது. இதுதாண்டா சினிமா என்பதை அனைவரது கண்களுக்கு முன்பாக காண்பித்து அதனை நிரூபித்தும் இருப்பவர் தான் இயக்குனர் ராஜமௌலி. இப்படி இருக்க அடுத்ததாக இயக்குனர் ராஜமௌலி பாகுபலி 3 எடுப்பாரா..? அல்லது ட்ரிபிள் ஆர் 2 எடுப்பாரா..? என அனைவரும் கேள்வி கேட்டு வந்த நிலையில், எதுமே கிடையாது எனது அடுத்த படம் மகேஷ்பாபுவை வைத்து தான் என்று கூறியிருக்கிறார். அதன்படி, தற்பொழுது பிரபல நடிகரான மகேஷ் பாபு-வை வைத்து பிரமாண்டமான படத்தை இயக்க தயாராக இருக்கிறார் ராஜமௌலி.

இத்திரைப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு துணையாக பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றன. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் மாதவனும் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் கதை வாரணாசியை நோக்கி இருப்பதால், அங்கு நேரடியாக சென்று மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இத்திரைப்படத்தை எடுக்க வாய்ப்பே இல்லை என்பதால் பிலிம் சிட்டிக்கு ஃபேமஸான ஹைதராபாத் 'ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி'யில் வாரணாசி போல பிரம்மாண்டமான செட்டு அமைக்க இருக்கின்றனர் படக் குழுவினர்.

முழுக்க முழுக்க உண்மையான வாரணாசி-யை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த செட்டின் மதிப்பு மட்டுமே ரூபாய் 50 கோடி என கூறப்படுகிறது. பணத்தைப் பற்றி துளிகூட கவலைப்படாத ராஜமௌலி செட்டுக்களை சரியாக அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறாராம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது கென்யாவில் நடக்க இருக்கிறது.. அங்கு உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தான் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் பல காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றனவாம். அதற்காக பட குழுவினர் முன்பதாகவே கென்னியாவிற்கு சென்று தேவையான அனுமதிகளை வாங்கி வருகின்றனர்.

இதனைப் பார்த்த ராஜமௌலியின் தீவிர ரசிகர்கள், தற்பொழுது சினிமாக்களில் சரியான திரைப்படங்கள் இல்லை ஐயா... பல கோடி போட்டு படம் எடுக்கிறீர்கள். அதனை கொஞ்சம் பார்க்கும் அளவிற்கு எடுங்கள் உங்கள் படத்திற்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம் என கண்ணீர் மல்க பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!