இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை என்று அனைவரும் சொல்லும் விதமாக சமீப நாட்களாக பழைய பாடல்கள், பழைய காமெடிகள், பழைய காதல் கதைகள் என அனைத்தும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த லிஸ்டில் பழைய திரைப்படங்களை ரீலீஸ் செய்யும் ட்ரெண்டிங்கும் தற்பொழுது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 'பாபா' திரைப்படம் ரிலீஸ் ஆனப்பொழுது, தியேட்டர்களில் மக்கள் கூட்டம் வராது என அனைவரும் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்த பொழுது ரசிகர்கள் அலை மோதிக் கொண்டு வந்து இத்திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்த தருணம் பல தயாரிப்பாளர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது என்றே சொல்லலாம். இதனை அடுத்து ரீ ரிலீஸ் லிஸ்டில், ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சச்சின், கில்லி, என பல திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு மக்கள் மனதில் பேராதரவை பெற்றது.
இதையும் படிங்க: முதல் திருமணம் நாசமா போச்சு.. 2வது திருமணம் உயிரே போச்சு.. கண்ணீர் விட்டு கதறிய நடிகை அஞ்சு அரவிந்த்..!

அதிலும் குறிப்பாக 12 வருடங்களுக்குப் பிறகு சுந்தர்.சி-யின் இயக்கத்தில் வெளியான 'மதகஜராஜா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு, மீண்டும் பழைய சந்தானத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என மக்கள் மத்தியில் குரல்கள் எழுந்தன. அதற்கு இணங்கி தற்பொழுது நடிகர் சந்தானம், நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் 'சச்சின்' திரைப்படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின், உண்மையில் முதல் முதலாக இத்திரைப்படத்தை இப்பொழுதுதான் நான் பார்க்கிறேன். மிகவும் அருமையான திரைப்படத்தை இயக்குனர் எடுத்து வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட அழகான திரைப்படங்கள் இன்று மக்கள் மத்தியில் இல்லை என்றும் இந்த படத்தில் நடிகர் விஜய் மிகவும் அழகாக இருக்கிறார் என்றும் கூறிச் சென்றார்.

இன்று தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் காட்சிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பழிவாங்குதல் என காமெடி காட்சிகளே இல்லாமல் விறுவிறுப்பை மட்டுமே இயக்குனர்கள் எதிர்பார்த்து கதைகளை இயக்கி வருகின்றனர். இதனால் இளசுகளை தவிர குடும்பஸ்தர்கள் யாரும் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதையே வெறுத்து வருகின்றனர். இந்தப் போக்கை அப்படியே விட்டால் சினிமாவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்து முழுவதுமாக சென்றுவிடும் என நினைத்த தயாரிப்பாளர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் பழைய திரைப்படங்களை ஒவ்வொன்றாக தூசு தட்டி ரீரிலீஸ் செய்து பணத்தை பார்த்து வருகின்றனர். ரசிகர்களும் பழைய படங்களை காணாத 2கே கிட்ஸ்களும் இத்த திரைப்படங்களைக் கண்டு மகிழ்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

இப்படி இருக்க, 2020 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய் ஜோதிகா இருவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'குஷி'. இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவையே. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஜோதிகாவின் இடுப்பை பார்த்து பிரச்சனையில் சிக்கிக் கொள்வார் நடிகர் விஜய். குழந்தையில் மருத்துவமனையில் இருந்து பிரிந்த இவர்கள் இருவரும் படத்தின் இறுதியில் ஒன்று சேரும் காட்சிகள் அனைத்தும் இன்றும் மக்கள் மனதில் மறக்க முடியாத அனுபவங்களாகவே இருக்கிறது.

அதேபோலத்தான் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய், அசின், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் அட்டகாசமான நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "சிவகாசி". மக்கள் மத்தியில் பெரிதும் ஹீட் அடித்த திரைப்படமான இந்த படத்தில் தான் நடிகை நயன்தாரா, சூப்பர் ஸ்டாரு ஜோடி என்ற பாட்டுக்கு நடனமாடி அனைவரையும் திகைப்படைய செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊரிலிருந்து ஓடி வந்த விஜய், அசின் சொன்ன ஒரு வார்த்தைக்காக பல வருடங்கள் கழித்து தனது சொந்த ஊருக்கு செல்லும் பொழுது தனது தாயையும் தங்கையையும் கொடுமைப்படுத்தும் அண்ணன் பிரகாஷ்ராஜை நல்வழிப்படுத்த எடுக்கும் முயற்சிகளை அழகாக காண்பித்து இருப்பார் இயக்குனர்.

இப்படிப்பட்ட அருமையான இந்த இரண்டு திரைப்படத்தையும் சூர்யா மூவிஸ் மூலம் தயாரித்த ஏ.எம்.ரத்தினம் தற்பொழுது குஷி மற்றும் சிவகாசி ஆகிய இரு படங்களையும் ரீரிலிஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தியேட்டர்களின் இருப்பை பார்த்துவிட்டு விஜயின் இவ்விரு திரைப்படங்களும் வெளியாகும் தேதியை அறிவிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்பாக ரீரிலீஸ் செய்யப்பட 'கில்லி' திரைப்படத்தையும் ஏ.எம்.ரத்தினம் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல்ஹாசன் ஆண்மை குறித்து பேசிய பிக்பாஸ் முத்துக்குமரன்..! என்னய்யா இப்படி பேசிட்டாரு..!