தமிழ் திரை உலகில் உன்னருகே நானிருந்தால், வானத்தைப்போல, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்றால் அவர்தான் அஞ்சு அரவிந்த். ஆனால் இவர் எத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் 'பூவே உனக்காக' என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களின் ஆதரவை பெற்றார்.

அப்பொழுதே காந்த கண்ணழகியாக இருந்த அஞ்சு அரவிந்த்துக்கு சில படங்களுக்கு மேல் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மலையாள திரை உலகில் நடிக்க துவங்கினார். இப்படியான பிரபல நடிகை, 2002 ஆம் ஆண்டு தனது மாமாவான தேவராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடங்களிலேயே விவாகரத்து வாங்கி இருவரும் பிரித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் ஆண்மை குறித்து பேசிய பிக்பாஸ் முத்துக்குமரன்..! என்னய்யா இப்படி பேசிட்டாரு..!

இதனை அடுத்து சில நாட்கள் தனிமையில் வாழ்ந்து வந்த அஞ்சு, 2006ம் ஆண்டு வினைச்சந்திரன் என்ற பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவர்களுடைய வாழ்க்கை பல வருடங்கள் நீடிக்காமல் பாதியிலேயே முடிந்துவிட்டது. ஏனெனில் அஞ்சு இரண்டாவதாக திருமணம் செய்த அவரது கணவர் உயிரிழந்தார். இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட அஞ்சு, தனது மகளுக்காகவே இதுவரை வாழ்ந்து வருகிறார். மேலும் தனக்கு சொந்தமான இடத்தில் டான்ஸ் கிளாஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட அஞ்சு தனது நடனங்கள் முதல் தனது வாழ்க்கையின் அனுபவங்களையும் சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வப்போது பதிவிட்டு பல ரசிகர்களை தன் உள்ளங்கைகளில் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையை குறித்து தனியார் சேனலுக்கு பேட்டி மூலமாக தெரிவித்திருக்கிறார் அஞ்சு அரவிந்த் . அதன்படி, "எனக்கு நடைபெற்ற இரண்டு திருமண உறவுகளும் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை, மாறாக சோகத்தை தான் கொடுத்தது. என்னுடைய முதல் திருமணம் பல பிரச்சினைகளைக் கடந்து விவாகரத்தில் முடிந்தது, ஆனால் எனது இரண்டாவது திருமணத்திலாவது மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று பார்த்தால் எனது கணவரது உயிர் உலகத்தை விட்டு பிரிந்தது. இதனால் பல வருட காலமாக வேதனையிலும் மன அழுத்தத்திலுமே நான் அமர்ந்து இருந்தேன். இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே 'சஞ்சய் அம்பல பரம்பத்' என்பவருடன் லிவி-ங்கில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன்.

பெங்களூருவில் இன்று நான் நடன டீச்சர் ஆக இருக்கிறேன் என்றால் அந்த அடையாளத்தை எனக்கு கொடுத்தவரே சஞ்சய் தான். ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் எட்டாவது படிக்கும் பொழுதே சஞ்சய் தான் எனது முதல் காதலனாக இருந்தார். எங்கள் காதல் கதையை ஒரு படமாகவே நீங்கள் எடுக்கலாம். அதிலும் குறிப்பாக 96 திரைப்படம் வெளியான பொழுது அந்த படத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்த்தோம். ஏனெனில் அந்த அளவிற்கு எங்கள் காதல் கதையும் இருந்தது. அந்தப் படத்தை பார்க்கும் பொழுது எல்லாம் பள்ளி நாட்கள் தான் எங்களுக்கு நினைவுக்கு வரும். நான் எப்படி இன்று டான்சராக இருக்கிறேனோ அதேபோல் தான் சஞ்சையும் டான்ஸராக இருந்தார். நாங்கள் இருவரும் பள்ளி பருவத்தில் சந்தித்துக் கொண்டதும் ஒரு நடன வகுப்பில் தான். இப்பொழுது இருப்பதைப் போல் செல்போன் வசதிகள் எங்கள் காலத்தில் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் கண்டிப்பாக பிரிந்து இருக்க மாட்டோம்.

ஆனால் விதி காலம் கடந்தும் எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெங்களூருவில் நான் தற்பொழுது நடத்திக் கொண்டிருக்கும் நடனப் பள்ளிக்கு 'அஞ்சு அரவிந்த் அகாடமி ஆப் டான்ஸ்' என்ற பெயரை வைத்து அழகு பார்த்தவர் சஞ்சய். ஆரம்பத்தில் ஐடியில் வேலை செய்து வந்திருந்த சஞ்சய் தற்பொழுது அந்த வேலையில் இருந்து வெளியே வந்து எழுதுவதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். எனக்காகவும் எனது மகளுக்காகவும் காதலனாக இருந்து எல்லா காரியங்களையும் அவர் முன்னெடுத்து செய்து வருகிறார்" என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஜெயிச்சிட்டோம் மாறா...பல சவால்களை கடந்து கப்படித்த RCB..! பிரபலங்களின் எமோஷனல் ட்வீட்ஸ்..!