தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, தற்போது தியா மற்றும் தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சூர்யா - ஜோதிகா சில வருடத்திற்கு முன்னர், குடும்பத்தோடு சென்னையில் இருந்து மும்பையில் குடி பெயர்ந்தனர். ஜோதிகா கொடுத்த அழுத்தம் காரணமாகவே சூர்யா இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

இதன் பின்னர், இந்த சர்ச்சை குறித்து பேசிய நடிகை ஜோதிகா... கொரோனா காலத்தில் தன்னுடைய பெற்றோரை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இனி அப்படி எந்த ஒரு பிரச்சனையும் நிகழாத வண்ணம் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூறினார்.
இதையும் படிங்க: கட்அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.. ‘சிங்கம்’ சூர்யாவை அசிங்கப்படுத்திய ரசிகர்..!

அதே போல் தன்னுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சூர்யா - ஜோதிகா இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. சென்னையில் இருந்து வெளியேறிய பின்னர் சூர்யா தன்னுடைய பிள்ளைகளை மும்பையில் மிகவும் பிரபலமான IB பள்ளியில் சேர்த்தார்.

தியா இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த நிலையில, 600-க்கு 581 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். மேலும் பள்ளியின் வழக்கப்படி, மாணவர்கள் அனைவருக்கும் பட்டமளிப்பு விழா இன்று விமர்சியாக நடந்துள்ளது.

இதில் தியாவின் பெற்றோர் சூர்யா - ஜோதிகா மட்டும் இன்றி, சூர்யாவின் தந்தை சிவகுமார், அவரின் மனைவி, ஜோதிகாவின் பெற்றோர், சகோதரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில்... அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும், பிரபலங்களும் தொடர்ந்து தியாவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தியா தன்னுடைய மேல் படிப்புக்காக, அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 90களில் கதைக்களம்; மாஸ் லுக்கில் சூர்யா... மார்கெட்டை தூக்கி நிறுத்துமா ரெட்ரோ?