• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத்துறை.. முதுகெலும்பில்லாத கோழை என விளாசிய ரகுபதி..!

    பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத்துறை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
    Author By Nila Thu, 20 Mar 2025 19:09:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ed-raid-minister-ragupathi

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழகம் அஞ்சாது என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத் துறை தற்போது மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

    Bjp against

    தமிழகத்தின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜக, தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத் துறை மூலம் நீட்டியது., பாஜகவின் ஆணவத்துக்கான அடிதான் உயர் நீதிமன்றம் இப்போது எழுப்பிய கேள்விகள். “இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை, யாரையும் துன்புறுத்தவில்லை” என்றெல்லாம் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சொன்னபோது, “பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது” என நீதிமன்றம் கண்டித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இரவு வரை பெண் அதிகாரியை சிறைபிடித்து சோதனை நடவடிக்கை எடுப்பது அச்சுறுத்தல் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம்.

    இதையும் படிங்க: பொத்தாம் பொதுவாக உள்ளது, மனுவை திருத்த உத்தரவு.. வலுவற்ற வாதங்கள் வைக்கிறதா அரசு..?

    Bjp against

    எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்றும் பாஜக ஆளாத மாநிலங்களில் முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளைப் புனைந்து, எதிர்க்கட்சிகளை முடக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

    Bjp against

    எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத் துறை என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமலாக்கத் துறையால் வழக்குகள் பதியப்பட்டவர்கள், பாஜகவில் இணைந்ததும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் நின்றுவிடுவது அமலாக்கத் துறையின் அறிவிக்கப்படாத விதி என்றும் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதும் வழக்கு பதிவதும் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆள்பிடிக்க மட்டுமே., எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து சோதனை நடத்துவது அதை வைத்து வழக்கு போடுவேன் எனச் சொல்லி மிரட்டி அவர்களை பாஜகவுக்கு ஆதரவாளராக மாற்றுவது என மத்திய பாஜக அரசின் அடியாள் துறையாக அமலாக்கத் துறை செயல்பட்டு வருகிறது.

    Bjp against

     முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டுக்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம். ஒருகாலமும் திமுகவின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது என அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத் துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழகத்தையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் சோதனை மேற்கொண்டது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் இப்போது எடுத்திருக்கும் முயற்சி நாடாளுமன்ற மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு பாஜகவை நிலைகுலையச் செய்திருக்கிறது என்று அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளார் அமைச்சர் ரகுபதி. கொள்ளையனோடு கூட்டுச் சேர்ந்த காவலனாக அமலாக்கத் துறை பாஜகவோடு கூட்டு வைத்து, பாஜகவின் குற்றங்களுக்குத் துணை போய்க் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ED-க்கு எதிரான வழக்கு.. தமிழக அரசு மனுவில் உள்ள 30 முக்கிய குற்றச்சாட்டுகள் இதுதான்..!

    மேலும் படிங்க
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்
    அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?

    அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?

    அரசியல்
    சேப்பாக்கம் மைதானம் வெடித்து சிதறும்... போலீசுக்கு பறந்த மிரட்டல் மெயில்

    சேப்பாக்கம் மைதானம் வெடித்து சிதறும்... போலீசுக்கு பறந்த மிரட்டல் மெயில்

    தமிழ்நாடு
    பாகிஸ்தான் உளவாளி கைது... விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!!

    பாகிஸ்தான் உளவாளி கைது... விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!!

    இந்தியா

    செய்திகள்

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்
    அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?

    அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?

    அரசியல்
    சேப்பாக்கம் மைதானம் வெடித்து சிதறும்... போலீசுக்கு பறந்த மிரட்டல் மெயில்

    சேப்பாக்கம் மைதானம் வெடித்து சிதறும்... போலீசுக்கு பறந்த மிரட்டல் மெயில்

    தமிழ்நாடு
    பாகிஸ்தான் உளவாளி கைது... விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!!

    பாகிஸ்தான் உளவாளி கைது... விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share