மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஒரு பக்தரின் 10 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இந்த புகாரில், கார் சாவியை பார்க்கிங் செய்ய அஜித் குமாரிடம் கொடுத்ததாகவும், பின்னர் நகை காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இதனால், அஜித் குமார் மீது சந்தேகம் விழுந்து, கோவில் நிர்வாகத்தினரால் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கு தொடர்பாக ஜூன் 27 அன்று மானாமதுரை குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். உடலில் 50 இடங்களில் அஜித் குமாருக்கு காயங்கள் இருந்ததாகவும் மூளை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அஜித் குமார் மீது காவலர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகள் மற்றும் லத்தி ஆகியவற்றால் தாக்கப்பட்டதாகவும், அவரது முகம் மற்றும் ஆண் உறுப்பில் மிளகாய் பொடி தூவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. சாதாரண கொலையே இல்லை, இதே கொலை செய்துள்ளார்கள் என்று கூறிய நீதிமன்றம், காவலர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கண் துடைப்பு என்றும் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியது. மேலும் அஜித் குமார் கொலை சம்பவத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகவும், பணம் கொடுத்து பிரச்சினையை மூடி மறைக்க பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது
இதையும் படிங்க: அஜித் மரண வழக்கில் அதிர்ச்சிகர தகவல்! சித்ரவதை செய்ய மிளகாய் பொடி வாங்கி தந்ததே Close friend தானாம்..!
அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா, மடப்புரம் கோவில், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், பல்வேறு நபர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே குற்றப்பத்திரிக்கையில் குறை இருப்பதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை மற்றும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் குற்றப்பத்திரிக்கையில் குறை இருப்பதாக திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்.. 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்! சிபிஐ காவலுக்கு நீதிமன்றம் அனுமதி..!