சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே அரசு டவுன் பஸ்ஸில் பள்ளிக்கு சென்ற மாணவியிடம் சில்மிஷம். அரசு பேருந்து கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அந்த மாணவி தனது தோழிகளுடன் பள்ளிக்கு அரசு டவுன் பஸ்சில் சென்றுள்ளார் அப்போது அந்த பேருந்து, ஆவணியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது, கண்டக்டர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அருகில் நின்ற மாணவிகளிடமும் தொட்டு பேசி சில்மிஷம் செய்துள்ளார்.
மேலும் பள்ளியிலிருந்து மாலையில் மாணவி வீடு திரும்பியதும், இதை பற்றி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) பேபி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி... காப்பகத்தில் 9 வயது சிறுமியை மாறி, மாறி சீரழித்த மிருகங்கள்... ஆண், பெண் வார்டன்கள் கைது...!
அதில், அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த எடப்பாடி சித்தூரை சேர்ந்த சின்னசாமி (வயது 45) என்பவர், 7 மாணவிகளிடம் பஸ்சில் சென்று வரும்போது சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனையடுத்து சின்னசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர் சிறையில் அடைத்தனர்.
எடப்பாடி அருகே அரசு டவுன் பஸ்ஸில் பயணம் செய்யத பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இருமல் மருத்திற்காக கட்டுக்கட்டாய் கைமாறிய பணம்... அமலாக்கத்துறையிடம் முக்கிய ஆதாரங்கள்... சிக்கப்போகும் திமுக முக்கிய புள்ளிகள்...!