ஜெனீவா: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 61-வது அமர்வு ஜெனீவாவில் கடந்த 23-ந்தேதி தொடங்கி மார்ச் 31 வரை நடைபெறுகிறது. இதில் உயர்மட்ட கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் OIC அமைப்பு ஜம்மு காஷ்மீர் குறித்து தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பியது.
இதற்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவின் பிரதிநிதி அனுபமா சிங் 'ரைட் டு ரிப்ளை' உரிமையை பயன்படுத்தி பேசியபோது, பாகிஸ்தானின் தொடர் பிரசாரம் அதன் பொறாமையை மட்டுமே வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டார்.
அவர் கூறியதாவது: "பாகிஸ்தானின் இந்த தொடர் பிரசாரம் பொறாமை நிறைந்தது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதை இன்று தெளிவாக தெரிகிறது. ஆனால் பாகிஸ்தான் பொருளாதார சிக்கல்களில் ஆழ்ந்து தவிக்கிறது.
இதையும் படிங்க: இனி இந்தியா வச்சதுதான் சட்டம்! பதறும் பாக்.,!! 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை!!
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி நிதி பாகிஸ்தானின் சமீபத்திய IMF பெயில்அவுட் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். உலகின் உயரமான ரயில் பாலம் போன்ற திட்டங்கள் போலியானவை என்றால், பாகிஸ்தான் 'La La Land' என்ற கற்பனை உலகில் வாழ்கிறது என்றுதான் பொருள்."
மேலும், "ஜம்மு காஷ்மீர் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.

1947 இந்திய சுதந்திர சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி இந்தியாவுடன் இணைந்தது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மாற்ற முடியாதது. பாகிஸ்தானின் தொடர் பிரசாரத்தால் இந்த உண்மை மாறாது" என்று வலியுறுத்தினார்.
அனுபமா சிங் தொடர்ந்து, "இந்த பகுதி குறித்த ஒரே சர்ச்சை என்னவென்றால், பாகிஸ்தான் இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதுதான். பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை வெளியேற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். OIC அமைப்பை ஒரு நாட்டின் 'எக்கோ சேம்பர்' ஆக மாறியதாகவும் விமர்சித்தார்.
இந்தியாவின் இந்த கடுமையான பதிலடி சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பிரசாரம் செய்வதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இது இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐ.நா. அமர்வில் இந்தியாவின் தைரியமான பதில் பலரையும் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை! ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்! ஐ.,நா-வில் வெளுத்து வாங்கிய இந்தியா!