இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமே ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சி தான். இது ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பிடிக்கவில்லை.
தங்கள் நாடுகளை ஈரான் அச்சுறுத்தக்கூடும் என்பதால், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை முறியடிக்க இரு நாடுகளும் களம் இறங்கின. ஈரானை அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்த ஈரான் ஒப்புக்கொண்டது.

அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட வேண்டும் என்று டிரம்ப் நிர்பந்தம் செய்தார். ஆனால் அதை ஈரான் ஏற்கவில்லை. இதனால் பல கட்டமாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரான் பேச்சு வார்த்தையில் உடன்படவில்லை என்றால், இஸ்ரேல் நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்று டிரம்ப் சொல்லி இருந்தார்.
இதையும் படிங்க: தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!
எப்படியாவது ஈரானின் மொத்த அணு ஆயுத திட்டங்களையும் தகர்க்க வேண்டும் என்பது இஸ்ரேலின் பல ஆண்டு கனவு. ஆனால் அமெரிக்காவிடம் இருந்து க்ரீன் சிக்னல் வராமல் இருந்தது. ஈரானுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்ததும் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று ஒதுங்கி கொண்டது.

அதை போல் இஸ்ரேல் மேல் ஈரான் கைவைத்தால் அமெரிக்கா நேரடியாக களம் இறங்கும் என்றும் ட்ரம்ப் அதிரடி காட்டினார். ஒரு காலத்தில் ஈரான் பேரரசு என்று மார்த்தட்டினார்கள். அதை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும். இல்லை என்றால் அடுத்த தாக்குதலில் எதுவும் மிச்சம் இருக்காது என்று ஈரானை டிரம்ப் எச்சரித்தார். ஈரானிடம் இருந்து கடுமையான பதிலடி வந்தால் அமெரிக்காவை காக்கவும், இஸ்ரேலை காக்கவும் தயாராக இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.
டிரம்பின் எச்சரிக்கையை ஈரான் பொருட்படுத்தவில்லை. டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இன்றும் தாக்குதல் தொடர்ந்தது. இதில் பல ஏவுகணைகளை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தினாலும், சில ஏவுகணைகள் டெல் அவிவ் நகரில் நெரிசல் மிக்க குடியிருப்பு பகுதிகளை தாக்கின. இதில் வீடுகள், அடுக்கு மாடி கட்டடங்கள் கடும் சேதமடைந்தன. முன்கூட்டியே மக்களை பதுங்கு குழிக்குள் இஸ்ரேல் அனுப்பி விட்டதால் இஸ்ரேல் தரப்பில் பெரியளவில் உயிர்ச்சேதம் இல்லை.

ஆனால், ஈரான் தாக்குதலில் டெல் அவிவ்வில் உள்ள அமெரிக்க தூதரகமும் தப்ப வில்லை. தூதரக கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டதை இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர்Mike Huckabee மைக் ஹக்கபீ ஒப்புக் கொண்டார்.டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் சிறிய சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை அவர் கூறினார்.
இதையும் படிங்க: மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான்-இஸ்ரேல்.. இந்தியாவில் எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை..!