அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாடுகளை பழிவாங்குவதற்காக கொண்டு வந்த வரி விதிப்பு விஷயத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். டிரம்ப் விதித்த பழிவாங்கும் வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரக் கொள்கையின் மையப் பகுதியாகவும், ஒரு முக்கிய வெளியுறவுக் கொள்கை கருவியாகவும் வரிகளைப் பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. டிரம்பின் சர்ச்சைக்குரிய முடிவுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கிய முதல் தீர்ப்பு இதுவாகும்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறிவிட்டார் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெஞ்சில் இருந்த 9 நீதிபதிகளில் ஆறு பேர் டிரம்பின் வரிகளை எதிர்த்தாலும், மூன்று பேர் மட்டுமே அவற்றை ஆதரித்தனர்.
டிரம்பின் முடிவு நுகர்வோர் மற்றும் வணிகங்கள் மீதான செலவுச் சுமையை அதிகரித்துள்ளது என்று அது கருத்து தெரிவித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி, அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் உள்ள கூட்டாளி நாடுகள் மீது பரஸ்பர வரிகளை டிரம்ப் அறிவித்து வர்த்தகப் போரை ஆரம்பித்தார். அவர்கள் எதிரிகளா அல்லது நண்பர்களா என்பதைப் பொருட்படுத்தாமல், வரிகள் குறைந்தபட்சம் 10 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டன.
இதையும் படிங்க: டிரம்ப் பேச்சை எடுத்ததால் முற்றிய வாக்குவாதம்..!! பெற்ற மகளையே சுட்டுக்கொன்ற தந்தை..!!
அமெரிக்க உச்ச நீதிமன்றமே ஜனாதிபதிக்கு வரி விதிக்க உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்த பின்பும், தனது கட்டணக் கொள்கைகளால் உலகம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்திய டிரம்ப், பின்வாங்கப் போவதில்லை எனக்கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் அவர் கொண்டு வந்த வரி விதிப்பு முறையை விமர்சித்திருந்தாலும், "எனக்கு கவலையில்லை" என பதிலளித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், “நீதிமன்றத்தின் முடிவு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என விமர்சித்த டிரம்ப், நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு தன்னிடம் வேறு சக்திவாய்ந்த மாற்று வழிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். அவர்களின் முடிவு தவறானது. ஆனால் அது பெரிய விஷயமல்ல. எங்களிடம் அதிக சக்திவாய்ந்த வழிமுறைகள் உள்ளன” எனக்கூறினார்.
இதனை மெய்பிக்கும் வகையில், தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றொரு பரபரப்பான முடிவை அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத உலகளாவிய வரியை விதிக்கும் சிறப்பு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த முடிவு இப்போது சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் தீவிர விவாதத்திற்கு வழிவகுக்கிறது.
இதை டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் அறிவித்தார். "அனைத்து நாடுகளுக்கும் உலகளாவிய 10 சதவீத வரி விதிப்பில் ஓவல் அலுவலகத்தில் இருந்து கையெழுத்திடுவதில் நான் பெருமைப்படுகிறேன். இது கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வரும்," என்று அவர் கூறினார். வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவிலும், உண்மைத் தாளிலும் திட்டத்தின் முழு விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சாதி பத்தி கேட்டேனா? அவ்ளோ சின்ன புத்தி இல்ல... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பட்டிமன்றம் ராஜா..!