அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே கருத்து மோதல் இருந்த வந்த நிலையில் டிரம்ப் வெளியிட்ட ஒரு கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். குடியேற்றம் தொடர்பான சட்டத்தை மீறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டங்கள் வெடித்தன. இதுக்குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசமும், மேயர் பாஸும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவர்கள் இந்தப் பிரச்சினையை சரியாகக் கையாளவில்லை. இவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல, அவர்கள் குழப்பவாதிகள் மற்றும் கலகக்காரர்கள் என்று தெரிவித்திருந்தார். டிரம்பின் இந்த பதிவுக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், பெரிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். அதனால்தான் அந்த ஆவணங்கள் வெளியிடப்படவில்லை என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

எலான் மஸ்க் - டிரம்ப் இடையே மோதல் உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது திடீர் திருப்பமாக இருவருக்கும் இடையே சமரச போக்கு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இவர்கள் மாறி மாறி கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், டிரம்ப் வெளியிட்ட ஒரு கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு கொடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முன்னாதாக டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகிய எலான் மஸ்க் அவரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாகவும் எலான் மஸ்க் பரிசீலிப்பதாக சொல்லப்பட்டது. டிரம்ப் அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை நிறுத்தப்போவதாக எலான் மஸ்க் அறிவித்தார். பிறகு, அந்த முடிவை மாற்றிக்கொண்டு, விண்கலம் தொடர்ந்து செயல்படும் என்றார். அதேபோல, ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் ஒரு கருத்தைத் தெரிவித்தார். பின்னர் அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.
இதையும் படிங்க: முடங்கியது எக்ஸ் வலைதளம்... வாய்திறக்காமல் மௌனம் காத்த நிறுவனம்; என்ன செய்கிறார் எலான் மஸ்க்?