ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதலின் விளைவாக மோசமடைந்து வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்காக இந்திய அரசு கடந்த பல நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பில், முதல் கட்டமாக, இந்திய தூதரகம் வடக்கு ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்களை வெளியேற்றி, ஜூன் 17 ஆம் தேதி ஆர்மீனியாவிற்கு பாதுகாப்பாக கடக்க உதவியது என்று கூறியுள்ளது. ஈரான் மற்றும் ஆர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகங்களின் மேற்பார்வையின் கீழ் மாணவர்கள் ஆர்மீனிய தலைநகரான யெரெவனுக்கு சாலை வழியாக பயணம் செய்துள்ளனர். இந்த மாணவர்கள் இன்று மதியம் சிறப்பு விமானத்தில் யெரெவனில் இருந்து புறப்பட்டு, ஜூன் 19, அதிகாலையில் ஆபரேஷன் சிந்துவின் ஆரம்ப கட்டங்களின் ஒரு பகுதியாக புது டெல்லியை வந்தடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

வெளியேற்றும் செயல்முறையை சுமூகமாக எளிதாக்கியதற்காக ஈரான் மற்றும் ஆர்மீனியா அரசாங்கங்களுக்கு இந்திய அரசு நன்றி தெரிவிதுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு இந்தியா மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதாகவும், தற்போதைய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானில் உள்ள இந்திய தூதரகம், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை நாட்டிற்குள் விரோதப் போக்கு அதிகரித்துள்ள பகுதிகளிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்துவதற்கும், பின்னர் கிடைக்கக்கூடிய மற்றும் சாத்தியமான விருப்பங்களைப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்றுவதற்கும் உதவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள இந்தியர்கள், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் அதன் அவசர உதவி எண் மூலமாகவும், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட 24x7 கட்டுப்பாட்டு அறையுடனும் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!