இன்று அதிகாலையில் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள், இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்டவை, ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதற்கு பதிலடியாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நிச்சயம் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஈஸ்டர் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரானின் இதயத்தில் ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... முக்கிய தலைவர் மரணம்?

இந்த தாக்குதலை ஈரான் அரசு தலைவர் அயோத்துல்லா அலி கொமேனி கண்டித்துள்ளார். வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கான தண்டனை கடுமையாக இருக்கும் என்றும் கடுமையான தண்டனையை எதிர்பார்த்து காத்திருங்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து தனது வான் வழியை ஈரான் மூடியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் விமான சேவையை முழுமையாக ஈரான் முடக்கியுள்ளது. ஈரான் வான்வெளி மூடப்பட்ட நிலையில் 3 மணி நேரமாக ஏர் இந்தியா விமானம் ஒன்று வானில் வட்டமடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!