இஸ்ரேல், ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றி இருக்கிறது. ஈரானின் அணு உற்பத்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஈரான், தனது அணு உற்பத்தி கூடங்களின் முக்கிய கட்டமைப்புகளை இழந்தது.
அதே போல் ராணுவ தளங்களிலும் மிகப்பெரிய சேதம். கொத்து கொத்தாக வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும், ஈரானின் அனைத்து வடிவிலான ராணுவத்தின் தலைமை தளபதி முகமது ஹூசைனை இந்த தாக்குதலில் இஸ்ரேல் கொன்று விட்டது.
இது தவிர இரண்டு முக்கிய படை பிரிவின் தலைமை தளபதிகளும், 2 முக்கிய அணு விஞ்ஞானிகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. 100க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி விட்டது. அதை இஸ்ரேல் முறியடித்தது. அடுத்த கட்டமாக மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் அட்டாக் குறித்து ஈரானுக்கு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!
ஏனென்றால் அடுத்ததாக திட்டமிடப்பட்டு இருக்கும் தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவை. ஒரு காலத்தில் ஈரான் பேரரசு என்று மார்த்தட்டினார்கள். அதை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும். இல்லை என்றால் அடுத்த தாக்குதலில் எதுவும் மிச்சம் இருக்காது என்று ஈரானை டிரம்ப் எச்சரித்தார்.

அதை போல் இஸ்ரேல் மேல் ஈரான் கைவைத்தால் அமெரிக்கா நேரடியாக களம் இறங்கும் என்றும் அதிரடி காட்டினார். ஒப்பந்தம் போட ஈரானுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தேன். ஒப்பந்தம் போட்டாக வேண்டும் என்பதை உறுதியாக கூறினேன். மிகவும் நெருக்கமாக வந்த ஈரான், அதை செய்யாமலேயே போய்விட்டது. நான் அவர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்; இதன் பின்விளைவு எதிர்பார்த்ததை விடவும், ஏற்கனவே சொன்னதை விடவும் மிகவும் மோசமாக இருக்கும் என்றார்.
இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அமெரிக்க துணை தூதரக கட்டடம் ஈரான் தாக்குதலில் சேதம் அடைந்தது. இருநாடுகளின் ராணுவமும் அதிரடி தாக்குதல்களை இரவிலும் அரங்கேற்றி வருவதால் யுத்தம் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து, ஈரானில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதால் டெஹ்ரானில் இருந்து ஈரான் மக்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாடும், டெல் அவிவ்வில் இருந்து மக்களும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலும் அறிவித்துள்ளன. தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந் நிலையில், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமகன்களை வெளியேற்றும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. ஆர்மீனியா வழியாக இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், ஈரானின் பல்வேறு இடங்களில் உள்ள 100க்கான இந்திய குடிமகன்களில் குறிப்பாக மாணவர்கள் ஆர்மீனியா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆர்மீனியாவுக்குள் நுழைந்த பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து பத்திரமாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது. ஈரானில் தற்போதுள்ள சூழலில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் வசிக்கின்றனர். அதே போல இஸ்ரேலில் 26,000 இந்தியர்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!