தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய நான்கு நாட்களே அவகாசம் இருப்பதால் வேட்பாளர்கள் மும்முரமாக மனு தாக்கல் செய்ய செயல்பட்டு வருகின்றனர். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

இதனிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் நடத்திய தேர்தல் பரப்புரை நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அவரது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் பரப்புரை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நான் ரியல் பிக்பாஸ்... என்னை ஜெயிக்க வைங்க..! சீமான் ஃபயர் ஸ்பீச்..!!
அரியக்குடி உள்ளிட்ட காரைக்குடி பகுதிகளில் சீமான் மக்கள் முன் தோன்றி சீமான் பரப்புரை செய்தார். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்திய சீமான் திடீரென பாட்டு பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தார். ஓட்டு போட போகும் பெண்ணே தயங்கி நிற்காதே… உழைக்கும் மக்கள் சின்னம்… அது விவசாயி சின்னம் என்றும் உதய சூரியன், இரட்டை இலை, தாமரை சின்னங்களில் ஓட்டை போட வேண்டாம் என்று பாட்டு பாடி இருந்தார். பிரச்சாரங்களில் பாட்டு பாடி சீமான் வாக்கு சேகரித்து வருவது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்ல... அவன பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்..!! சீமானிடம் முறையிட்ட பெண்கள்..!!