ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மாறி மாறி தாக்குதல் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை சுமார் 950 பேர் உயிரிழந்ததாகவும், 3,450 பேர் படுகாயம் அடைந்ததாகவும் வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் அளிக்காது எனக்கூறி ஈரான் ஒதுங்கி விட்டது.
இதையும் படிங்க: 900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!
இதை தொடர்ந்து அமெரிக்கா 'மிட்நைட் ஹாமர்' என்று பெயரில் ஈரான் மீது நேரடியாக தாக்குதல் தொடுத்தது. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள், 13,500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியிருந்தது.

இந்த நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் மீது 10 ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 3 ஏவுகணைகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளன. ஈரான் இந்த தாக்குதலுக்கு, ஆபரேஷன் பராக்கத் அல்-ஃபத்தாஹ் என பெயரிட்டிருக்கிறது. இதில் பராக்கத் என்றால் ஆசிர்வாதம் என்றும் அல்-ஃபத்தாஹ் என்றால் வெற்றி என்றும் பொருள். இது இஸ்லாத்தில் அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒன்றாகும். மொத்தமாக சேர்த்து படித்தால் 'வெற்றியின் ஆசீர்வாதம்' என்று பொருள் வருகிறது.
ஈரான் தாங்கள் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ராணுவத்தளம் குறித்தான 3D காணொளியை வெளியிட்டுள்ளன. இந்த வீடியோவில், "இந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் பல அயோக்கியத்தனமான தாக்குதல்கள் இங்கிருந்துதான் துவங்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளன.
இந்த தாக்குதலால் கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வீட்டிற்க்குள்ளேயே இருக்க இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கப்போகிறோம் என்று ஈரான் முன்கூட்டியே தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னரே கத்தார் தனது வான் எல்லையை மூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பதலடி கொடுக்க சவுதியின் அமெரிக்க ராணுவ தளத்திலிருந்து போர் விமானங்கள் ஈரான் நோக்கி பறந்துள்ளன. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: 6 ஏர்போர்ட் மீது அட்டாக்.. இறங்கி அடிக்க துவங்கிய இஸ்ரேல்.. ஈரான் மீது குண்டு மழை..!