பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் நடத்திய சண்டை பற்றி விளக்கவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு போக்கு குறித்தும் சர்வதேச நாடுகளிடையே விளக்க, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், 4 நாள் போர் பற்றி விளக்கம் அளிக்கவும், பயங்கரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கவும் அனைத்து கட்சி எம்பிகள் அடங்கிய 7 குழுக்களை 33 நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழு பனாமா, கயானா நாடுகளை தொடர்ந்து கொலம்பியாவுக்கு சென்றது.
இதையும் படிங்க: தேசியமொழி எது? ஸ்பெயினில் கனிமொழி Thug ரிப்ளை.. இப்படி சொல்லுவாங்கனு எதிர்பார்க்கலைல..!

பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு எதிராக போராடுபவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது அழகல்ல. கொலம்பியாவின் இரங்கல் அறிக்கை கவலையை தந்தது என்று கூறினார்.அதன் பிறகு கொலம்பிய அதிகாரிகள் குழுவினருடன் நம் அனைத்து கட்சி குழுவினர் பேசினர். பஹல்காம் அட்டாக் மற்றும் அதன் பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதை எடுத்து கூறினர்.இதையடுத்து பாகிஸ்தானுக்காக கொலம்பியா இரங்கல் சொன்ன அறிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்தியாவின் பாதிப்பை இப்போது முழுமையாக புரிந்து கொண்டோம் என்றும் சொன்னது.

இதனை அடுத்து சசி தரூர் தலைமையிலான குழு பிரேசிலுக்கு சென்றுள்ளது. பிரேசிலில் பார்லிமென்ட் உறுப்பினர்களை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் சந்தித்து பேசினார். பின்னர் சசி தரூர் பேசியதாவது: அமெரிக்க அதிபர் பதவியின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு, அந்த மரியாதையை மனதில் கொண்டுதான் நாங்கள் பேசுவோம். பாகிஸ்தான் உடன் மோதலை நிறுத்தும் படி, யாரும் எங்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஏற்கனவே நிறுத்தச் சொல்லியிருந்தோம்.

நாங்கள் போரை விரும்பவில்லை என்பதால் நாங்கள் வற்புறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம். மே 7ம் தேதி தொடக்கத்தில் இருந்தே மோதலை நீடிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கவே தாக்குதல் நடத்தினோம். இல்லை என்றால் தாக்குதல் நடத்தி இருக்க மாட்டோம். அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதுக்குழு செல்லும் அதே நாளில் நாங்களும் வாஷிங்டனில் இருப்போம். பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியிருப்பது தற்செயலானது அல்ல.

ஆனால் அவர்கள் இந்திய பிரதிநிதிகள் சென்ற அளவு பல நாடுகளுக்கு செல்லவில்லை. அவர்கள் சில முக்கிய தலைநகரங்களாக நினைக்கும் இடத்திற்கு மட்டுமே சென்றார்கள். இந்தியாவைப் பற்றி அக்கறை கொண்டவர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களின் கவனத்தை நாம் பெற வேண்டும் என சசி தரூர் பேசினார்.
இதையும் படிங்க: இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!