அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதால், அங்கு தொழில் வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு பாதாளத்துக்கு சென்று விட்டது. அத்தியாவசிய தேவையான கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க கூட முடியாத நிலைமையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
இந்நிலையில், 2024-25 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி இலக்கை பாகிஸ்தான் அரசு அடையவில்லை. திட்டமிடப்பட்ட 3.6 சதவீதத்திற்கு பதிலாக வெறும் 2.68 சதவீத வளர்ச்சி விகிதத்தை மட்டுமே அடைந்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு மேலும் நிதி நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது.

நாட்டின் மொத்த உற்பத்தி $411 பில்லியன் ஆக இருந்தாலும், தனிநபர் வருமானம் $1,824 ஆக உயர்ந்தாலும் – இவை எல்லாம் திட்ட இலக்குகளை எட்டவில்லை.விவசாயம் 1.8% வளர்ச்சி, தொழில்துறை 1.14% சரிவு – இந்த தரவுகள் எல்லாம் நாட்டின் நிதி மோசமான நிலையில் இருப்பதை நிரூபிக்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம் பாகிஸ்தான், அமெரிக்காவின் ஆதரவுடன் IMF-இல் இருந்து கடன் பெற்றது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!
இதில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ₹8,500 கோடி கடன் வாங்கி உள்ளது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தாலும், அமெரிக்க ஆதரவு காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் ஒதுக்கப்பட்டது.

இதில் இந்தியாவின் ₹500 கோடியும் அடங்குகிறது என்பது ஒரு வேதனை! ஆனாலும் பாகிஸ்தானால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே இரண்டு தவணைகள் வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட தவணைக்கு, ஐ.எம்.எப்., பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதன் வாயிலாக, பாகிஸ்தானில் மின்சாரம், சமையல் காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கான வரியும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் நாட்டின் வளர்ச்சி குறைந்து வர, மறுபக்கம் கடன்களும் கூடியே வருகிறது. இதனை சமாளிக்க, சர்வதேச வணிக வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடன் ஏற்பாடுகள் மூலம் கூடுதலாக, 4.9 பில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பு படி ரூ.41,170 கோடி) கடன் வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதில், வணிக வங்கிகளிடம் இருந்து 7-8% வட்டியுடன் $2.64 பில்லியன் குறுகிய கால கடனாக பெற திட்டமிட்டுள்ளது.

மேலும், நீண்டகால கடனாக $2.27 பில்லியன் பெற, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு (Standard Chartered), துபாய் இஸ்லாமிய வங்கி, சீனாவின் ICBC போன்ற வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் ICBC வங்கியிடமிருந்து மட்டும் $1.1 பில்லியன் பெற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் குயிட்டா நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது: பாகிஸ்தானின் அனைத்து கால கூட்டாளியாக சீனா உள்ளது. சவுதி அரேபியா நம்பகமான நட்பு நாடாக உள்ளது. துருக்கி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சுக்கும் இது பொருந்தும்.
அவர்களுடன் வர்த்தகம், வணிகம், வணிகம், புதுமை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம், முதலீடுகள் மற்றும் லாபகரமான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் இப்போது எதிர்பார்க்கிறார்கள். பிச்சை பாத்திரத்துடன் அங்கு வருவதை அவர்கள் இனியும் விரும்பவில்லை.

பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இயற்கை மற்றும் மனித வளத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொருளாதார நெருக்கடியை சுமக்கும் கடைசி நபராக, ராணுவ தளபதி ஆசிம் முனீருடன் இணைந்து நான் இருப்பேன் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்களே! சட்டக்கல்லூரி மாணவிக்கு வக்காலத்து வாங்கும் பவன், கங்கனா..!