இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் சூழல் மோசமாகி வரும் நிலையில், கடந்த 5 நாட்களாக மாறி மாறி கடுமையாக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அமெரிக்கா மற்றும் ஈரானிடையேயான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானுக்கு எதிராக திரும்பியிருக்கிறது அமெரிக்கா. எனவே, கடந்த ஓரிரு நாட்களாக அமெரிக்கா இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரான் அதிபரை ‘நிபந்தனையின்றி சரணடைய’ வலியுறுத்தி டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அவர் இப்போது மிக எளிதான இலக்காகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போரில் களமிறங்கும் அமெரிக்கா.. ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டலால் பதறும் உலகம்..!
அதே சமயம், அவர் பாதுகாப்பாகவே இருக்கிறார். நாங்கள் அவரை இப்போதைக்கு வெளியே கொண்டுவரப் போவதில்லை (கொல்லப்போவதில்லை). பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், எங்கள் பொறுமை குறைந்துகொண்டே போகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜி7 மாநாட்டிற்காக கனடா சென்றிருந்த டிரம்ப், அங்கு கனடா பிரதமர் கியெர் கரோலின் லீவிட் உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனே, பாதியிலேயே மாநாட்டை முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பினார். வாஷிங்டன் திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். நான் அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் கையெழுத்திடவில்லை. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நான் இப்போது அவ்வளவாக பேரம் பேசும் மனநிலையில் இல்லை என்றார்.

இந்நிலையில், கோட்டை வாயிலில் படைகள் வாள் ஏந்தி நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிவிட்டுள்ளார். அவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போர் தொடங்குகிறது. பிராந்திய பயங்கரவாதத்துக்கு எதிராக பலத்துடன் இயங்க வேண்டும், சமரசத்துக்கு வாய்ப்பில்லை. டெல் அவிவ் மீது Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அழைப்பு விடுத்த போதிலும், இரு நாடுகளும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் இஸ்ரேலை நோக்கி இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தற்போது, ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்து இருப்பது போர் இன்னும் உக்கிரம் அடையும் என்பதை உலக நாடுகளுக்கு தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: கருவிலேயே சிதைந்த ஈரானின் கனவு.. இஸ்ரேல் கொடுத்த மரண அடி.. போரில் இதுவரை வெளிவராத பகீர் சம்பவம்..!