• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, January 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை!! விஷம் குடிக்க வைத்து கொன்ற கொடூரம்! கதறி அழும் தாய்!

    படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்த ஜாய் மஹபாத்ரா, இந்திய ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை அதே பகுதியை சேர்ந்த கடைக்காரர் அமிருல் இஸ்லாம் என்பவரிடம் வாங்கினார்.
    Author By Pandian Sun, 11 Jan 2026 11:24:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Tragic! 19-Year-Old Hindu Youth Joy Mahapatra 'Forced' to Consume Poison in Bangladesh Over ₹360 Mobile Installment Debt – Mother’s Crying Video Goes Viral Amid Rising Attacks"

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு (2024) மாணவர் போராட்டம் தீவிரமடைந்து அரசுக்கு எதிரான கலவரமாக மாறியது. அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில், ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்று இடைக்கால அரசு தொடர்ந்து இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

    மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் ஒஸ்மான் ஹாடி கடந்த டிசம்பர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மீண்டும் பெரும் கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக இந்தியர்கள் மற்றும் இந்து சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    கடந்த 4 வாரங்களில் மட்டும் வங்கதேசத்தில் 11 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதலில் ஜவுளி ஆலையில் பணியாற்றிய இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் தீவைத்து எரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில இந்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    இதையும் படிங்க: இந்துக்களை விரட்டி வேட்டையாடும் கும்பல்!! வங்கதேசத்தில் மேலும் ஒரு இளைஞர் பலி!! அதிர்ச்சியூட்டம் சம்பவம்!

    டிசம்பர் 31-ஆம் தேதி ஷரியத் பூர் மாவட்டத்தில் மருந்து கடை மற்றும் மணி டிரான்ஸ்பர் தொழில் செய்த தொழிலதிபர் கோகன் தாஸ் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டார். உயிர் தப்ப அவர் நீரோடையில் குதித்தார். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அதன் பிறகு மிதுன் சர்க்கார் என்ற இந்து இளைஞர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு விரட்டப்பட்டார். அவர்களிடமிருந்து தப்ப கால்வாயில் குதித்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டனர்.

    இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு சோக சம்பவம் நடந்துள்ளது. சுனாம்கன்ஜ் மாவட்டத்தில் வசித்து வந்த 19 வயது இந்து இளைஞர் ஜாய் மஹாபாத்ரா கொடூர தாக்குதலுக்குப் பிறகு விஷம் குடித்து உயிரிழந்தார்.

    படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த ஜாய், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4,000 ரூபாய்க்கு ஒரு மொபைல் போனை அந்தப் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் அமிருல் இஸ்லாம் அவரிடமிருந்து வாங்கினார். வாரந்தோறும் தவணையாக செலுத்தி வந்தார். கடைசி தவணையான சுமார் 360 ரூபாய் (500 டாகா) சரியாக செலுத்த தாமதமானது.

    தாமதத்தைத் தீர்க்க கடைக்குச் சென்ற ஜாயை அமிருல் இஸ்லாமும் அவரது ஆட்களும் கொடூரமாக தாக்கினர். மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தினர். மொபைலை பறித்துக்கொண்டனர். மேலும் விஷம் குடிக்கும்படி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜாய் விஷம் வாங்கி குடித்ததாக தெரிகிறது.

    BangladeshHindus

    பலத்த காயங்களுடன் வீடு திரும்பிய ஜாய், தான் விஷம் குடித்துவிட்டதாக தாயிடம் கூறிவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சில்ஹட் (Sylhet) மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஜாயின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் அமிருல் இஸ்லாம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, வங்கதேச இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்காரர் அமிருல் இஸ்லாம் குற்றச்சாட்டுகளை மறுத்து, “நாங்கள் விஷம் கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

    இந்த தொடர் சம்பவங்கள் வங்கதேசத்தில் வசிக்கும் இந்து சமூகத்தினரின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. வங்கதேச இந்து மதத் தலைவர்களும், இந்திய அரசியல் தலைவர்களும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகமும் இத்தகைய வன்முறைகளை கண்டித்து, நீதி வழங்க வேண்டும் என்று வங்கதேச அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

    இதையும் படிங்க: மற்றொரு இந்து இளைஞர் அடித்து கொலை!! வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!! பற்றி எரியும் கலவரம்!

    மேலும் படிங்க
    13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!

    13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!

    தமிழ்நாடு
    ₹40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது!

    ₹40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது!

    தமிழ்நாடு
    கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை! சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு!

    கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை! சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு!

    தமிழ்நாடு
    “இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்!

    “இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்!

    தமிழ்நாடு
    "தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!" - ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

    "தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!" - ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    வரலாறு பேசும் மணிமண்டபம்!  சிவகங்கையில் முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    வரலாறு பேசும் மணிமண்டபம்! சிவகங்கையில் முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    தமிழ்நாடு

    செய்திகள்

    13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!

    13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!

    தமிழ்நாடு
    ₹40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது!

    ₹40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது!

    தமிழ்நாடு
    கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை! சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு!

    கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை! சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு!

    தமிழ்நாடு
    “இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்!

    “இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்!

    தமிழ்நாடு

    "தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!" - ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    வரலாறு பேசும் மணிமண்டபம்!  சிவகங்கையில் முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    வரலாறு பேசும் மணிமண்டபம்! சிவகங்கையில் முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share