கனடாவிலுள்ள கனானாஸ்கிஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு 15 ம்தேதி துவங்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாடுகளின் பிரதமர்கள் மாநாட்டின் இடையே குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது, மாநாட்டில் இருந்து பாதியிலேயே கிளம்ப வேண்டிய சூழலில் இருக்கிறேன் என மற்ற தலைவர்களிடம் டிரம்ப் கூறினார். அதைக்கேட்டு மற்ற தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டம் நடக்கிறது. அதற்காக ஒரு நாள் முன்னதாகவே மாநாட்டில் இருந்து வெளியேறுகிறேன். ஆனால், உங்களுடன் இரவு உணவை முடித்து விட்டு வாஷிங்டன் கிளம்புவேன் என டிரம்ப் விளக்கமாக கூறினார்.

ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் இன்று 5வது நாளை எட்டியிருக்கிறது. ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமானதால், அதுபற்றி தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்த டிரம்ப் மாநாட்டில் இருந்து பாதியிலேயே திரும்புவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர். இஸ்ரேல் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லை. ஈரான், அமெரிக்க நிலைகளை தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதையும் படிங்க: இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!
ஆனாலும்கூட டெல்அவிவ் நகரில் ஈரான் நடத்திய தாக்குதலில் அங்குள்ள அமெரிக்க தூதரகம் சேதத்தை சந்தித்தது. இதனால் தூதரகத்தை மூட வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. இதனால் ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க தயாராகி விட்டது. அதற்காகத்தான் தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசிக்க
டிரம்ப் வாஷிங்டனுக்கு அவசரமாக திரும்பினார் என கூறப்படுகிறது.

ஈரான்– இஸ்ரேல் போர் தீவிரமாவது, தூதரகம் அருகே நடந்த தாக்குதல் போன்ற செய்திகளால் அப்செட் ஆன டிரம்ப், ஜி 7 மாநாடு நடந்து கொண்டிருந்தபோதே ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். தெஹ்ரான்நகரில் இருந்து ஈரானிய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதுதான் அது. நான் கையெழுத்திடச் சொன்ன
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
அப்படி செய்யாதது அவமானம். மனித உயிர்களை ஈரான் வீணடிக்கிறது. எளிமையாகச் சொல்வதானால், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது. அதை நான் மீண்டும் மீண்டும் உறுதியாக சொன்னேன்! இப்படிப்பட்ட சூழலில் அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியிருந்தார்.

ஜி 7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறும் முன் டிரம்ப் கூறுகையில், ஈரான் இஸ்ரேல் இருநாடுகளுக்குமே போர் என்பது மிகவும் வலிமிகுந்த விஷயம்தான் . ஆனால், இந்த போரில் ஈரான் வெற்றி பெறப்போவதில்லை என்றார். அணு ஆயுத தடை ஒப்பந்தம் பற்றி ஈரான் பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும்; இட்ஸ் டூ லேட் என சொல்வதற்கு முன் ஈரான் பேச்சுக்கு வர வேண்டும் என டிரம்ப் எச்சரித்து விட்டு கனடாவை விட்டு கிளம்பினார்.
இதையும் படிங்க: ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!