நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 180 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அடுத்த கட்ட பேச்சின் போது போர் நிறுத்தத்துக்கான அறிவிப்பு வெளியாக கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், உச்சக்கட்ட மோதல் வெடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் கற்பனை பண்ண முடியாத பதிலடியை கொடுக்க புடின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு 250 ட்ரோன்கள், 14 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வீசியது.
இதையும் படிங்க: வேற லெவல் மாஸ்.. ஜப்பானை ஓரங்கட்டிய இந்தியா..! உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி..!

இந்த கொடிய தாக்குதலில் பல கட்டடங்கள் தரைமட்டமாகின. 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதோடு ரஷ்யா நிறுத்தவில்லை. மீண்டும் கொடிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி இருக்கிறது. இந்த முறை கீவ், சைட்டோமிர், மைக்கோலைவ், க்மெல்னிட்ஸ்கி உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து கொத்து, கொத்தாக ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா வீசியது. மொத்தம் 298 ட்ரோன்கள் குண்டு மழை பொழிந்தன. சக்தி வாய்ந்த 69 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வீசி ரஷ்யா அதிர வைத்தது. குண்டு வீச்சு துவங்கியதும் உக்ரைன் மக்கள் அலறியடித்து பதுங்கு குழிகளை நோக்கி ஓடினர்.

இந்த தாக்குதலில் கொத்து கொத்தாக கட்டடங்கள் தகர்ந்து விழுந்தன. குழந்தை உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போர் துவங்கிய பிறகு உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன், ஏவுகணை தாக்குதல் இதுதான். ரஷ்யாவின் தாக்குதலால் டிரம்ப் கொதித்துப்போனார். புடினுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்த பிறகு, முதல் முறையாக அவரை விளாசினார் டிரம்ப். புடின் செய்த காரியம் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி மக்களை அவர் கொன்று குவிக்கிறார். இது சுத்தமாக பிடிக்கவில்லை.

புடினுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. பேச்சு வார்த்தைக்கு நடுவே மக்கள் வசிக்கும் பகுதியில் மிகப்பெரிய குண்டு வீச்சை நடத்தி இருக்கிறார். இப்படி மக்களை கொன்று குவிக்கும் அளவுக்கு அவருக்கு என்ன ஆகி விட்டது என்று தெரியவில்லை என்று டிரம்ப் சாடினார். இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டார்.
இதையும் படிங்க: இதுதான் ரைட் டைம்! பாக்., பண்ண காரியத்துக்கு பதிலடி கொடுத்தே ஆகணும்! அமெரிக்காவில் முழங்கிய சசி தரூர்!