உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு திருமண நிகழ்வு இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 20 வயதான சரோஜ், 19 வயதான சாவித்ரி மற்றும் 18 வயதான சந்தோஷ் ஆகிய மூன்று சகோதரிகளும் ஒரே நேரத்தில் ஒரே ஆணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரது அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து, அளவற்ற பாசத்துடன் வாழ்ந்து வரும் இந்த மூன்று சகோதரிகளும் தங்களுக்குள் பிரிய முடியாது என்ற உணர்வில் இருந்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் இணைந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்த இவர்களின் வீடியோக்களை படமாக்கிய கேமராமேன் விகாஷ் (விக்கு) என்பவரை அவர்கள் தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வெளியான வீடியோவில், விகாஷ் மூன்று சகோதரிகளின் கரங்களைப் பிடித்தபடி அக்னியை ஏழு முறை சுற்றி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சகோதரியின் நெற்றியிலும் தனித்தனியே குங்குமம் வைத்து, பின்னர் அவர்கள் மூவரும் விகாஷின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ பரவியதை அடுத்து இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

விமர்சகர்கள், “ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்” என்ற இந்திய இந்து திருமணச் சட்டத்துக்கு எதிரானது இந்த செயல் என்றும், இது சட்டப்படி குற்றம் என்றும் கூறுகின்றனர். ஆனால் சகோதரிகள் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க தயங்கவில்லை. “பழங்காலத்தில் அயோத்தி மன்னர் தசரதர் மூன்று அரசிகளை திருமணம் செய்திருந்தார். அது அவமதிப்பாகக் கருதப்படவில்லையே, அப்படியென்றால் எங்கள் செயலும் தவறில்லை” என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
https://x.com/sunilyadav21/status/2080240728643420340?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2080240728643420340%7Ctwgr%5E0760728c859572522e344a321d988a273c8f6427%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.deccanherald.com%2Ftrending-now%2Fwatch-from-reel-to-real-three-up-sisters-marry-their-cameraman-4084680
மேலும், “நாங்கள் பிரிய முடியாது. தனித்தனியே திருமணம் செய்தால் பிரிந்து வாழ வேண்டிய நிலை வரும். எனவே விகாஷிடம் எங்கள் எண்ணத்தை தெரிவித்தபோது அவரும் அதை ஏற்றுக்கொண்டார். எங்கள் முடிவில் எந்தத் தவறும் இல்லை” என்று தங்கள் நிலையை நியாயப்படுத்தியுள்ளனர்.
இந்த அரிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் சமத்துவம், திருமணச் சட்டங்கள் மற்றும் பாரம்பரிய மதிப்பீடுகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. சட்ட வல்லுநர்கள் இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக அமைச்சர்களுக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம்! முதல்வர் விஜய்யின் ‘ஊழலற்ற ஆட்சி’ வாக்குறுதிக்கு சோதனை?