இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாளான 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த நோட்டுகள் பொருளாதாரத்தில் புழக்கத்தில் உள்ள பணத்தில் 86% ஆகும். அதற்கு பதில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. புதியதாக 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு பல்வேறு வண்ணங்களில் இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், "2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் அல்லது 2000 நோட்டுக்குப் பதில் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.
இதையும் படிங்க: ஆர்பிஐ வெளியிட்ட நகைக்கடனுக்கான ரூல்ஸ்.. முழுமையாக ரத்து செய்க.. ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!

அதன்படி கடந்த மார்ச் மாத நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.18 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களிடம் ரூ.6,471 கோடி மதிப்புள்ள அத்தகைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தது என தெரிவித்தது.
இந்நிலையில் ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ரூ.2,000 நோட்டுகள் சட்டப்படி செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எழுச்சி இருந்த போதிலும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மொத்த நாணய மதிப்பில் 86 சதவிகிதமும், மொத்த அளவில் 40.9 சதவீதம் பங்களிப்பும் கொண்டு ரூ.500 நோட்டு ஆதிக்கம் செலுத்துகிறது. கள்ளநோட்டை எதிர்த்துப் போராட புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: மீளா துயரத்திற்கு மக்கள் செல்வார்கள்.. புதிய விதிகளை திரும்ப பெறுக.. ரிசர்வ் வங்கிக்கு விஜய் வலியுறுத்தல்..!