குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம்1.38 மணி அளவில் 242 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 பைலட்களுடன் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ரக விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒரே ஒரு நபர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான விஜய் ரூபானியும் உயிரிழந்தார். லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் மகளைச் சந்திப்பதற்காக விஜய் ரூபானி, ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார்.
இதையும் படிங்க: அப்பளம் போல் நொறுங்கிய நீதிபதியின் கார்...4 உயிர்கள் பறிபோன சோகம்!

குஜராத் முன்னாள் முதல்வரின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பாஜக தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது கடைசி நாள் குறித்து வெளியான தகவல் அனைவரது மனதையும் பதைபதைக்க வைத்துள்ளது. 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக கருதி வந்த விஜய் ரூபானியின் மரணம் அதே எண்ணை குறிக்கும் தேதியில் முடிந்துள்ளது.

குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு , 1206 என்ற எண் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதி வந்துள்ளார். அவரது வீட்டில் ஸ்கூட்டர் முதல் கார்கள் வரை அனைத்து வாகன பதிவு எண்ணும் கூட 1206 தான். இந்த எண்ணை தனது அதிர்ஷ்டமாக விஜய் ரூபானி கருதினார்.

ஆனால் விதியை யாராலும் வெல்ல முடியாது என்பது போல், பல ஆண்டுகளாக விஜய் ரூபானியின் அதிர்ஷ்ட எண்ணாக இருந்த 1206, அவரது மரணத்திற்கான நாளாகவும் மாறியுள்ளது. ஏனெனில் விஜய் ரூபானி ஜூன் 5ம் தேதி லண்டன் சென்றிருக்க வேண்டியது. ஆனால் லூதியானா மேற்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக தனது பயணத்தை அவர் ஒத்திவைத்ததும், ஜூன் 12ம் தேதி பயணத்தை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: என்னை இளைய காமராஜர்-னு சொல்லாதீங்க! தவெக கல்வி விழாவில் விஜய் கோரிக்கை..!