அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.

விமானம் மேல் எழும்பிய போது 825 அடி உயரத்தை தொட்ட போது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் நிலையில் 242 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுவதால் அவர்களின் கதி என்ன என்பது குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையா? எவ்வளவு துணிச்சல்.. கொந்தளித்த அமித்ஷா..!

விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி இதே விமானத்தில் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் நிலை என்பது குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் செல்போனில் பேசிய மத்திய அமைச்சர் விமான விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அமித்ஷா ஓபன் சேலஞ்ச்..!