காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவிய உள்ளூர் பயங்கரவாதிகள் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே பொருளாதாரத்தில் சரிவை சந்தித்த பாகிஸ்தான், இந்தியா நடத்திய தாக்குதலில் மோசமான பாதிப்பை அடைந்தது. இந்த நிலையில் உலக நாடுகளிடம் கையேந்தி வருகிறது. இந்த சம்பவங்களுக்கு பின் ராணுவ வலிமையை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து ஆயுதம் கொள்முதல், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் 1,981 கோடியில் நவீன ஆயுதம் கொள்முதல் செய்ய 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2,000 கோடியில் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

எதிரி ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் ஆயுதங்கள், குறைந்த அளவிலான இலகு ரக ரேடார்கள், மிக குறுகிய இடத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், இரவிலும் பார்க்கும் திறன் கொண்ட கருவிகள், பாலஸ்டிக் ஹெல்மெட், வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு வகையான ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை அதிகரிக்க மற்றும் நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வாங்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
இதையும் படிங்க: துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!