தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கோவை,, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போடப்பட்ட தடை மூன்றாவது நாளாக இன்றும் நீடித்துள்ளது. இந்த நிலையில் திமுக ஆட்சியில் உறை கிணறுகள் வழியாக அல்லாமல் தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் மாவட்ட மக்கள் அவதியுறுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கம்.. பாஜகவுக்கு பெரிய இழப்பு.. பெங்களூரு புகழேந்தி சொல்லும் காரணங்கள்.!!
இதுகுறித்து அவர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் குடிநீரானது மாசுபட்டிருப்பதாகவும், உறை கிணறுகளுக்கு பதிலாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீரால் மக்கள் அவதியுறுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.

இயற்கையாகவே அசுத்தங்களை வடிகட்டி குடிநீரை சுத்திகரிக்கும் அமைப்பு கொண்ட உறை கிணறுகள், திறந்தவெளி மலம் கழித்தல், மலம கழித்தல், கழிவுகளை கொட்டுதல் மட்டுமன்றி ஒப்பந்ததாரர்களின் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள தகவல், திராவிட மாடல் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைத் தோலுரித்துக் காட்டுகிறது.
ஆனால் குழாய்ப் போக்குவரத்து மூலம் குடிநீரில் உள்ள கழிவுகள் வடிகட்டப்படுகின்றன எனவும், ஆற்றிலிருந்து நேரடியாகக் குடிநீர் பெறப்படுவது தற்காலிகமானது தான் எனவும் வாய்க்கு வந்ததைக் கூறி தங்கள் நிர்வாகத்தின் மீதுள்ள புகார்களை மூடி மறைக்க முயலும் திமுக அரசு, அசுத்தமான குடிநீரைக் குடித்து மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்த சோகத்தையே தமிழகம் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அத்தகைய துயர விபத்திலிருந்து எந்தப் பாடங்களையும் கற்றுக் கொள்ளாமல் அப்பாவி மக்களின் உயிரை இந்த ஆளும் அறிவாலய அரசு இப்படி அலட்சியப்படுத்துவது ஏன்? கோடை வெயில் வாட்டி வதைக்கையில் சுத்தமான குடிநீருக்கு நட்டுப்பாடு நிலவுவது ஆபத்தானதல்லவா?
உரிமைகளைப் பற்றி மேடைக்கு மேடை பிறருக்கு வகுப்பெடுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு, குடிநீர் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதும் அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டியது ஆளும் அரசின் கடமை என்பதும் தெரியாதா?

எனவே இதுகுறித்த உயர்மட்ட விசாரணையை உடனடியாகத் துவங்குவதோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டையும் சீர் செய்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியை அசைக்க ஒரு கொம்பனும் இல்லை.. மாஸ் காட்டும் செல்வபெருந்தகை.!!