ப்ளூம்பெர்க் என்பது நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தனியார் நிதி, மென்பொருள், தரவு மற்றும் ஊடக நிறுவனம். நிதி நிறுவனங்களுக்கான பகுப்பாய்வு, பங்கு வர்த்தக தளங்கள், தரவு சேவைகள் மற்றும் செய்திகள் போன்ற நிதி மென்பொருள் கருவிகள் மற்றும் நிறுவன பயன்பாடுகளை ப்ளூம்பெர்க் வழங்குகிறது.

ப்ளூம்பெர்க் 176 இடங்களையும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்ட ஒரு உலகளாவிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் பதவிகளுக்கு அதிக போட்டி நிலவுவதன் காரணமாக, சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ப்ளூம்பெர்க் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைத் திரையிடுகிறது.
இதையும் படிங்க: மயங்கி விழுந்த பா.சிதம்பரம்.. பதறிபோய் ஃபோன் போட்ட மோடி.. நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!!
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ப்ளூம்பெர்க்கின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் சுரேஷ் பிரபு மட்டும் தான்.

சி.ஏ., முடித்த சுரேஷ் பிரபு தற்போது ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வேந்தராக உள்ளார். மேலும், லண்டனில் உள்ள பொருளாதாரத்திற்கான கல்லூரியில் கவுரவ பேராசிரியராகவும் இருக்கிறார். ஆறு முறை எம்.பி.,யாக இருந்த சுரேஷ் பிரபு, வாஜ்பாய் அரசிலும், பிரதமர் மோடியின் முதல் இரண்டு ஆட்சி காலத்திலும் தொழில், மின்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் வனம், ரயில்வே, சிவில் விமானப் போக்குவரத்து, வணிகம் மற்றும் தொழில், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற பல அமைச்சரவை இலாகாக்களை நிர்வகித்து வந்தார். மேலும், ஜி-7 மற்றும் ஜி-20 மாநாட்டுக்கு பிரதமரின் தூதராகவும் சுரேஷ் பிரபு பணியாற்றியுள்ளார்.

தற்போது, சுரேஷ் பிரபு ப்ளூம்பெர்க்கின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ப்ளூம்பெர்க் பொருளாதார ஆலோசனைக் குழுவை அதன் தலைவரான, அமெரிக்க முன்னாள் வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமண்டோ, இத்தாலி முன்னாள் பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் அறிவித்தனர்.

இந்த புதிய குழுவினர் பட்டியலில் இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர், ஐ.எம்.எப்., இன் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் மற்றும் பல தொழில் துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர். இந்த குழுவில் சுரேஷ் பிரபு மட்டும் தான் இந்தியராக இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.. 2026இல் புதிய முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.. பாஜக அதிரடி!!