காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: அமெரிக்காவா இருந்தாலும் அனுமதிக்க முடியாது! இந்தியா - பாக்., விவகாரத்தில் ரன்தீர் ஜெய்ஸ்வால் தடாலடி..!
இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.

இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியே வந்து விட்டன.இப்படி பலத்த அடி வாங்கி தோற்ற பிறகும், போரில் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று பெருமை பீற்றி வந்த பாகிஸ்தான் முதல் முறையாக கதறி இருக்கிறது.

போருக்கு பிறகு துருக்கி, அஜர்பைஜான் போன்ற தங்களின் நட்பு நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் சுற்று பயணம் ஆரம்பித்தனர். இந்தியாவுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் பேசினார். அப்போது பிரமோஸ் ஏவுகணையை வைத்து இந்தியா நடத்திய பெரிய தாக்குதலில் பலத்த அடி விழுந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
அவர் கூறியது: மே 9 மற்றும் மே 10ம் தேதிக்கு நடுவே இந்தியாவுக்கு நிர்ணயித்த அளவில் பதிலடி கொடுக்க நாங்கள் முடிவு செய்தோம். அதிகாலை தொழுகை முடிந்து 4:30 மணிக்கு இந்தியாவுக்கு பாடம் புகட்ட எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே பிரமோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்தியா தாக்குதல் நடத்தி விட்டது. ராவில்பிண்டி ஏர்போர்ட் உட்பட பாகிஸ்தானின் பல இடங்களை குறி வைத்து தாக்கியது.

அதனால் நாம் தீட்டி வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் பாழ் ஆனது. அதன் பிறகு இது பற்றி எனக்கு ராணுவ தளபதி அசிம் முனீர் தகவல் சொன்னார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறினார். நம்மிடம் இருக்கும் ஆயுதங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை. பாகிஸ்தானில் அந்த ஏவுகணை என்ன செய்தது என்பதை அந்நாட்டு பிரதமர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இன்னும் பலமான அடி கொடுத்திருக்கலாம்! ஏன் விட்டு வைத்தோம் தெரியுமா? ராஜ்நாத் சிங் விளக்கம்..