இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ஜிஎஸ்டியின் கீழ் ஒவ்வொரு மாதமும் வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மே மாதம் முடிந்து ஜூன் மாதம் பிறந்துள்ள நிலையில் ஜூன் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2025 மே மாதத்தில் இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 16.4 சதவீதம் அதிகரித்து ரூ. 2.01 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடியை எட்டியிருந்தது. 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளது. கடந்த மே மாதம் ஜிஎஸ்டி மூலம் 2.01 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதம் வசூல் ஆன தொகையை விட 16.4 சதவீதம் அதிகம் ஆகும்.
இதையும் படிங்க: உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பினராயி மருமகன் ஸ்பான்சரா? கேரளாவில் வெடிக்கும் பூகம்பம்..!

இதில், மத்திய ஜிஎஸ்டி 35,434 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 43,902 கோடி ரூபாய், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 1.09 லட்சம் கோடி ரூபாய், செஸ் வரி 12,879 கோடி ரூபாய் என மொத்தம் 2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவீதம் அதிகரித்து 1.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவீதம் அதிகரித்து 51,266 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் மேம்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2024 மே மாதம் ஜிஎஸ்டி மூலம் 1,72,739 கோடி ரூபாய் வசூல் ஆகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஜிஎஸ்டி மூலம் 2.37 லட்சம் கோடி வசூல் ஆகி இருந்தது. தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது மாதம் ஜிஎஸ்டி வசூல் 2 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,72,739 கோடி மட்டுமே.

மே மாதத்தில் மொத்த ரீஃபண்ட் 4 சதவீதம் குறைந்து ரூ. 27,210 கோடியாக இருந்தது. மே மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வசூல் சுமார் ரூ. 1.74 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 20.4 சதவீதம் அதிகமாகும். ஜிஎஸ்டி வசூலில் மாநில வாரியாகப் பார்த்தால், மாநிலங்களுக்கு இடையே ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சியில் பெரிய வேறுபாடு உள்ளது.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்கள் ஜிஎஸ்டி வசூலில் 17 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் சுமார் 6 சதவீத வரை வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

இந்தியா முழுவதும் சராசரி ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. துறை சார்ந்த அல்லது பருவகால காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய மோடி அரசு மகிழ்ச்சியில் உள்ளது. அடுத்து வரும் மாதங்களிலும் வரி வருவாய் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 5 மடங்காகும் ராணுவம் பட்ஜெட்.. உலக அரங்கில் மாஸ் காட்டப்போகும் இந்திய ராணுவம்..!