உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் ஆலம்பாக் பகுதியில் மெட்ரோ ரயில் பாலத்தின் கீழ் 3 வயது பெண் குழந்தையுடன் தாயும் தந்தையும் வசிக்கின்றனர். குப்பைகளை பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் பெற்றோர் அயர்ந்து தூங்கியபோது ஒரு இளைஞன் ஸ்கூட்டரில் வந்து குழந்தையை தூக்கிச் சென்றான். அருகில் இருந்த அபார்ட்மென்ட் குடியிருப்பின் லிப்ட் பகுதியில் வைத்து குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

காலையில் தூக்கத்தில் இருந்து விழித்த பெற்றோர் குழந்தையை தேடினர். மெட்ரோ பாலத்தின் ஒரு பகுதியில் குழந்தை மயக்கமுற்று கிடந்தது. பெற்றோர் கதறி அழுதனர். குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, போலீசில் புகார் அளித்தனர். போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து குற்றம் செய்தவனை தேடினர். அவனை பற்றி தகவல் தருவோருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்றும் அறிவித்தனர்.
இதையும் படிங்க: பாக்., ராணுவ அதிகாரி மனைவியுடன் பேஸ்புக்கில் தொடர்பு.. உ.பி-யில் கைது செய்யப்பட்ட உளவாளியின் பகீர் பின்னணி..!

அவன் ஸ்கூட்டரில் செல்வதும், குழந்தையை தூக்கிச் செல்வது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவன் 26 வயது தீபக் வர்மா என்பதும், மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில் தண்ணீர் விற்பவன் என்பதும், அவன் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

தேவிகெடா (Devi Kheda) என்ற பகுதிக்கு அருகில் அவன் இருப்பதை செல்போன் டவர் மூலம் உறுதி செய்த போலீசார் இன்று அதிகாலை அவனை சுற்றி வளைத்தனர். அப்போது, தீபக் வர்மா மறைவிடத்தில் இருந்து போலீசாரை துப்பாக்கியால் சுட்டான். பதிலுக்கு போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் வர்மா, அங்கு இறந்தான். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காமுகனை அதிரடியாக சுட்டுக் கொன்ற லக்னோ போலீசாரையும் லக்னோ மக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!