குஜராத்தில் நிகழ்ந்துள்ள விமான விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பயணிகள், அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன எனவும் தெரிவித்தார். மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பற்றிய செய்தி மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் உள்ளது என்று ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுவிந்தர் சிங் சுகு கூறியுள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது பிரார்த்தனைகள் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு? - வெளியானது அதிர்ச்சி தகவல்...!

இந்தக் கடினமான காலகட்டத்தை கடக்க கடவுள் அனைவருக்கும் பலத்தையும் தைரியத்தையும் வழங்கட்டும் என கூறினார். இதை போல் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது வர்த்தகப்போர்.. அமெரிக்கா - சீனா பேச்சுவார்த்தை சக்சஸ்.. கை குலுக்கிக்கொண்ட 'பெரியண்ணன்கள்'