கிருஷ்ணகிரியில் 60 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியை குறிவைத்து இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது. 70 வயது முதியவரை கொலை செய்துவிட்டு இந்த கொடூர நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாகத் தொடர்ந்து உள்ளன. இளம் சிறுமிகள் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களும் இதன் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தேசிய குற்ற ஆவண மையம் மற்றும் பிற அரசு தரவுகளின்படி, தமிழகம் இந்திய அளவில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒப்பீட்டளவில் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு தோட்ட வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியினருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுமார் 70 வயதான முதியவர், மனைவி 60 வயதை எட்டிய மூதாட்டியுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட நபர்கள் கொலை மற்றும் வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். முதலில் கணவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அடித்து, காயப்படுத்தி, அவரை கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் இரட்டைக் கொலை... திரிசூலத்தில் அதிர்ச்சி சம்பவம்... தீவிர விசாரணை...!!
முதியவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் உயிரிழந்தார். இதன்பிறகு, 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மூதாட்டி கடும் உடல் ரீதியான துன்பத்திற்கு ஆளானார். இந்த கொடூரம் நடந்த நிலையில், மிகுந்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டி கொடூரக் கொலை... நேபாள நாட்டு பணிப் பெண்ணை தட்டி தூக்கிய போலீஸ்..!!