டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்றும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் காணவில்லை என்ற பதாகையைக் கைகளில் ஏந்தி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகம் உடனடியாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பரந்தூர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு அளித்த சுவாரஸ்ய பதில்!

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்கும் வரை தங்களின் நாடாளுமன்றப் போராட்டம் தொடரும் என்றும் மஹூவா மொய்த்ரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘நீங்கள் அவை தலைவருக்கு உத்தரவிட முடியாது’! கார்கேவுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!