வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் களில் பணம் எடுப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி கொடுக்கும் அறிவுறுத்தல்கள் பணி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள ஏடிஎம்களில் ஐந்து முறை ஒரு மாதத்திற்கு இலவசமாக பணம் எடுக்க முடியும். மச்சான் வங்கிகளின் ஏடிஎம் களில் மூன்று முறையில் கிராமப்புறங்களில் ஐந்து முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இலவசமாக அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளை தாண்டி மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் 23 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும்., நிதி அல்லாத சேவைகளுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 11 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் கருப்பு அட்டையைச் செருகி நூதன கொள்ளை.. வசமாக சிக்கிய வடமாநில கும்பல்..!

தற்போது வரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவை தாண்டி பணம் எடுத்தால் 24 ரூபாய் 78 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது தற்போது இரண்டு ரூபாய் உயர்ந்து 26 ரூபாய் 78 காசுகள் அளவுக்கு அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவாதத்தை ஏற்படுத்திய ஜிஎஸ்டி குற்றச்சாட்டு... விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன்!!