ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு துணை நிற்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இஸ்ரேல், ஈரான் நாடுகளிடையேயான போர், உலகளவில் 3வது உலகப்போராக வர்ணிக்கப்படுகிறது.
போரானது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவலாம் என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது. பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்களில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக நாடுகளின் வரைபடத்தை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், 'ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல். இது வெறும் ஒரு தொடக்கம் மட்டுமே. நடவடிக்கை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க: ஈரான் மீதான தாக்குதலுக்கு பைபிளில் இருந்து பெயர்..! இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட தகவல்..!
இதில் இந்தியாவின் வரைபடமும் இடம் பெற்று இருந்தது. ஆனால் அந்த படத்தில், ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது போன்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் இந்த படம் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இது சமூக வலைதளங்களில் இந்த விவாதம் பேசு பொருளாக மாறிவிட, இணையதளத்தில் விமர்சனங்கள், கேள்விகள் எழுந்தன. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகத்தின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இணையதளத்தில் பதிவேற்றியவரின் தவறு, சுட்டிக்காட்டியதற்கு நன்றி, இந்த படம் நீக்கப்பட்டு விட்டது என்று இஸ்ரேல் தூதரகம் அறிவித்தது.

இந்த நிலையில் இது பெரும் சர்ச்சையான நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ' இது வெறும் பிராந்தியத்தை குறிப்பிடுவதற்காக மட்டுமே இந்த உலக வரைபடம் பகிரப்பட்டுள்ளது. இதில், எல்லைகள் துல்லியமாக காட்டப்படவில்லை. ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் சில பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்தியா கூறி வருகிறது.

அண்மையில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது பேசிய பிரதமர் மோடி, எல்லைகள் ஆக்கிரமிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமில்லாதது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேல் மேல கையை வச்சா.. அடுத்த தாக்குதலுக்கு ஒன்னுமே இருக்காது.. ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்..!