கடன் என்பது ஒரு குடும்பத்தையே நிலைகுலைய செய்து விடும் என்பதற்கு பலரது வாழ்க்கை உதாரணமாக இருக்கிறது. கடன் தொல்லையால் தற்கொலை உள்ளிட்ட சம்பவங்களை அன்றாடம் நாம் பார்த்து வருகிறோம். சிறு சிறு தொகையாக பெறப்படும் கடன் பெரிய தொகையாக மாறி அதை அடைப்பதற்காக வாழ்க்கை ஓட்டம் மாறிவிடுகிறது. அதிலும் ஸ்பீடு வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி என வட்டி கட்டியை பல குடும்பங்கள் சீரழிந்து விடுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் கடன் பெற்றுக் கொண்டு மனைவி திரும்ப கொடுக்காததால் கணவனை கடன்காரர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு வாங்கி கட்டிக் கொண்ட கணவன், மனைவியின் மூக்கை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் தாவனகிரேவில் வசித்து வருபவர் விஜய். இவரது மனைவி வித்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய் ஜாமின் கையெழுத்து போட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வித்யா கடன் தொகையை கட்டாததால் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

கடன் வாங்குவதற்கு ஜாமீன்கள் எழுத்து போட்ட கணவன் விஜயையும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதனை அடுத்து விஜய்க்கும் வித்தியாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் கணவர் விஜய் வித்யாவின் மூக்கை கடித்து துப்பியதாக சொல்லப்படுகிறது. இதனை எடுத்து வித்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் தம்பியோடிய கணவன் விஜயை தேடி வருகின்றனர். கடன் தகராறில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை.. பூதாகரமாக வெடித்த பிரச்சனை.. ஃபுல் ஸ்டாப் வைத்த டி.கே சிவக்குமார்..!
இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!